விழுப்புரத்தில் பரபரப்பு! பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்கள்! கொந்தளித்த பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரத்தில் பெரியார் படிப்பகம் அருகே அமைந்திருந்த பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது பெரியார் படிப்பகம்.இதன் அருகில் மார்பளவு பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது.

Periyar statue near the Villupuram is damaged by unidentified persons

ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பகுதியில் தான் பொங்கல் விழா கொண்டாடப்படும். இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ சிலர் பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.

பெரியார் சிலையில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் முகம் மூக்கு அமைக்கப்பட்ட பகுதியில் உடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று அதை அறிந்த அந்த பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீதார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையைச் சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டு இருந்த நிலையில், கம்பி வேலியை உடைத்து அதற்குள் இருந்த சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர்.

பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணையைத் தொடங்கி உள்ள போலீசார், பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+