Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டிவனத்தில் திகுதிகு.. வன்னியர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு! ராமதாஸ்-அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று திண்டிவனத்தில் அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வன்னியர் சங்க அலுவலகம் ஒன்று அமைந்திருக்கிறது. வருகிற 17-ஆம் தேதி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் அன்புமணி பங்கேற்பார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

PMK Tindivanam Anbumani Ramadoss

ஆனால் இதை ஏற்காத ராமதாஸ் ஆதரவாளர்கள், உடனடியாக அந்த அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அலுவலகம் முன்பு குவிந்த அன்புமணி ஆதரவாளர்கள், ராமதாஸ் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திண்டிவனத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீப காலமாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணிக்கும், கட்சியின் நிறுவனமான ராமதாசுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்குகள் வெடித்து வந்தன. இதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்நத சம்பவம், கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்தான்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக் குழுவில், தனது பேரன் முகுந்தனை பாமக இளைஞர் சங்க தலைவராக ராமதாஸ் நியமித்திருந்தார். இந்த நியமனம் தொடர்பாக ஏற்கனவே அன்புமணிக்கு விஷயம் தெரிந்திருந்தது. மறைமுகமாக பல்வேறு விதங்களில் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, அதை புத்தாண்டு பொதுக்குழுவிலும் அறிவித்துவிட்டார். எனவே அன்புமணி மேடையில் அறிவிப்பு வெளியான உடனேயே கடும் எதிர்ப்பு தெரிவித்து மைக்கை தூக்கி வீசினார். இந்த சம்பவத்துக்கு பிறகு தந்தை மகன் இடையே மோதல்கள் தீவிரம் அடைந்தன.

மோதலி உச்சமாக, பாமக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 10ம் தேதி கட்சி தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், தலைமை பொறுப்பை கூடுதலாக தானே ஏற்றுக் கொள்வதாகவும் அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார். தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு காரணம், அன்புமணியின் மூன்று ஆண்டுகால தலைவர் பதவி மே 28ஆம் தேதியோடு நிறைவடைந்துவிட்டது என்பதால்தான் என்று ராமதாஸ் விளக்கம் அளித்து இருந்தார்.

மட்டுமல்லாது அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மனைவியுடன் சேர்ந்து என் கால்களை பிடித்துக் கொண்டு அழுதார் எனவும், தாய் மீது பாட்டிலை வீசினார் எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கியிருந்தார். இப்படி இருக்கையில், புதுச்சேரி அடுத்த பட்டாணூரில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க கோரி இரண்டு முறை அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. இதனை அடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், 16 குற்றச்சாட்டுகள் மீது போதுமான அவகாசம் அளித்தும் விளக்கம் அளிக்கவில்லை என்று சொல்லியும் அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார். இந்தப் பின்னணியில் தான் அன்புமணி ஆதரவாளர்கள் மற்றும் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+