என்டிஏ கூட்டணியில் ராமதாஸ்? பிரதமர் மோடியை சந்தித்தால் என்ன தவறு.. கேள்வி கேட்ட பாமக எம்எல்ஏ அருள்!
விழுப்புரம்: பிரதமர் மோடியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு நடத்துகிறாரா என்ற கேள்விக்கு அக்கட்சியின் எம்எல்ஏ அருள் பதில் அளித்துள்ளார். ராமதாஸ் மீது பிரதமர் மோடி மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பதாக கூறிய அருள், அவர்கள் இருவரும் சந்திப்பு நடத்தினால் என்ன தவறும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்திருக்கிறது. இதனால் ராமதாஸ் தரப்பு பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலில் திமுகவுடன் ராமதாஸ் தரப்பு கைகோர்க்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், திமுக தலைமை எந்தவித சிக்னலும் காட்டவில்லை. ஏனென்றால் விசிக தலைவர் திருமாவளவனுக்கு திமுக தலைமை முக்கியத்துவம் அளித்தது.

அதுமட்டுமல்லாமல் பாமக ஆதரவு வன்னியர் வாக்குகள் அதிமுக பக்கம் செல்லவே வாய்ப்பு அதிகம் என்று கணக்கிடப்படுகிறது. இதனால் தலித் சமூக வாக்குகளை இழக்க திமுக தயாரில்லை. இதனால் ராமதாஸ் தரப்பை கூட்டணியில் சேர்க்க திமுக முன்வரவில்லை. இதனால் ராமதாஸ் தரப்பு பாமக யாருடன் கூட்டணி அமைப்பது என்று தெரியாமல் தடுமாறி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பல கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். எங்களுக்கு வரும் அழைப்புகளை எடுத்து பதில் சொல்ல முடியாத அளவிற்கு அழுத்தம் உள்ளது. பாஜக கூட்டணியில் இணைய நெருக்கடி கொடுக்கிறார்கள்.
ராமதாஸ் தரப்பை இணைத்தால் மட்டுமே வெற்றி என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். எங்களுடன் வாங்க என்று அனைவரும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். பாமகவை தொடங்கியது ராமதாஸ் தான். அவர்தான் மக்களை சந்தித்துள்ளார். அதனால் மாம்பழ சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால், நீதி தர்மம் விலைக்கு வாங்கப்பட்டதாக அர்த்தம்.
கூட்டணிக்கான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ராமதாஸ் வசம் உள்ளது. பிரதமர் மோடிக்கு ராமதாஸ் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. அதனால் பிரதமரை சந்தித்தால் என்ன தவறு? இவர்கள் இருவரும் சந்திப்பார்களா என்று தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் என்டிஏ கூட்டணியில் ராமதாஸ் இணைகிறாரோ என்ற குழப்பம் எழுந்துள்ளது.
மார்ச் 1 மதுரை வரும் பிரதமர் மோடி, அடுத்ததாக மார்ச் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வேலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு வருகிறார். மார்ச் மாதத்தின் முதல் 2 வாரத்தில் பிரதமர் மோடி 3 முறை தமிழ்நாடு வரும் சூழலில், என்டிஏ கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று கருதப்படுகிறது.
-
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
கடலூர் மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
ஈரான் - அமெரிக்கா போரால் நெருக்கடி.. பிரதமர் மோடி டெல்லியில் அவசர மீட்டிங்! ஆலோசித்தது என்ன? -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?











Click it and Unblock the Notifications