தமிழ்நாடு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்க வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி?
விழுப்புரம்: பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் ஆண் குழந்தைகள், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்து பயன்பெறலாம் என
விழுப்புரம் கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஆண் குழந்தைகள் தங்கி கல்வி பயில்வதற்காக சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் சாலாமேட்டில் அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகின்றது.

இந்த இல்லத்தில் 84 ஆண் குழந்தைகள், வரவேற்பு பிரிவில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் என 98 குழந்தைகள் தங்கி கல்வி பயில்வதற்கு இடவசதி உள்ளது. இந்த இல்லத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் ஆண் குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 6 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் 1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை தங்கி படிப்பதற்கும் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான கல்வி, உணவு, இருப்பிடம், தொழில் சார்ந்த பயிற்சிகள் அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகள், இல்லத்தின் வளாகத்தில் உள்ள அரசு நேருஜி நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர். 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கல்வி படித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு தேவையான தங்கும் அறை, வகுப்பறைகள், நூலகம், கணிணி மற்றும் தட்டச்சு பயில்வதற்கான அறைகள் உள்ளன.
ஆகவே பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் ஆண் குழந்தைகள் அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்து பயனடையுமாறும், இதற்கு விரும்புவோர், விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் (பழைய உணவக கட்டிடம்) என்ற முகவரியையும், விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் 04146-290659 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications