Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செஞ்சி சங்கீதாவை தெரியுமா.. ஏகப்பட்ட ஆண் நண்பர்களாம்.. சின்ன பாப்பா விடலையே.. கடைசியில் நடந்த கொடுமை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: எந்நேரமும் ஆண் நண்பர்களுடன் மருமகள் போனில் பேசி வந்துள்ளார்.. கடைசியில் இது ஒரு கொலை வரை சென்றுவிட்டது.

விழுப்புரம் செஞ்சியை அடுத்துள்ளது கம்பந்தூர் மதுரா பாண்டியன் குளம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சின்னபாப்பா.. 63 வயதாகிறது.. இவரது கணவர் இறந்துவிட்டார்.. அதனால், தன்னுடைய 3 மகன்களையும் சின்னபாப்பா கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்..

Vizhupuram incident and why did the young daughter in law take this sudden decision

3 மகன்களுக்கு திருமணமாகிவிட்டது.. முனியன் மறைவுக்கு பிறகு, 3-வது மகன் பாஸ்கருடன் சின்னப்பாப்பா வசித்து வந்திருக்கிறார்.. பாஸ்கரின் மனைவி பெயர் சங்கீதா.. 30 வயதாகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

பாஸ்கர்: ஆனால், கடந்த 4 வருடத்துக்கு முன்பு, விபத்து ஒன்றில் பாஸ்கருக்கு கால் போய்விட்டது.. அதனால், இடதுகால் வெட்டி எடுத்துவிட்டனர்.. இதனால் அவருக்கு வேலைக்கு போக முடியாத நிலைமை வந்தது.. எனினும், குடும்பத்தை சமாளிக்க வேண்டும் என்பதற்காக, சங்கீதா கூலி வேலைக்கு சென்று, குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். குடும்ப சூழலால் வேலைக்கு சென்ற இடத்தில், நிறைய ஆண் நண்பர்களுடன் சங்கீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

மேலும், வேலை முடித்து வீட்டுக்கு வந்துவிட்டாலும், ஆண் நண்பர்களுடன் செல்போனில் அதிக நேரம் பேசிவந்தாராம்.. நாளுக்கு நாள் மருமகளின் நடத்தையில் மாற்றம் தென்பட்டதையும், வீட்டில் எந்நேரமும் போனில் ஆண் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்த மாமியார், சங்கீதாவை கண்டித்துள்ளார். ஆனாலும் சங்கீதா மாறவில்லை.. தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் செல்போனிலும், நேரிலும் பேசிக்கொண்டே இருந்தார்.

ஆத்திரம்: இதுதொடர்பாக சம்பவத்தன்றும், மருமகளை கண்டித்துள்ளார் சின்னப்பாப்பா.. அப்போது, 2 பேருக்குமிடையே தகராறு வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சங்கீதா, மாமியார் சின்ன பாப்பாவை, எட்டி உதைத்துள்ளார்.. இதில் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்த அழுதார் சின்னப்பாப்பா.. அப்போதும் ஆத்திரம் தாங்காத சங்கீதா, கீழே கிடந்த கட்டையை கொண்டு வந்து, மாமியாரை சரமாரியாக அடித்து தாக்கினார்..

இதில், சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த செஞ்சி போலீஸார், விரைந்து வந்து, சின்னபாப்பாவின் சடலத்தை பார்வையிட்டனர்..

ஆண் நண்பர்கள்: அக்கம்பக்கத்தினரிடமும் விசாரித்தனர்.. இறுதியில், சின்னப்பாப்பாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இப்போது சங்கீதா ஜெயிலில் உள்ளார். அவர் யார் யாரிடம் பேசினார்? ஆண் நண்பர்கள் யார் என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. மாமியாரை கட்டையாலேயே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+