பொன்முடி வீட்டுக்குள் சென்ற 3 பைகள்.. உள்ளே என்ன இருக்கு? ED அதிகாரிகளை சுத்துப் போட்ட திமுகவினர்!
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடந்து கொண்டிருக்கும்போது 3 பைகளை அமலாக்கத்துறையினர் வீட்டுக்குள் எடுத்துச் சென்றதால் திமுகவினர் கொந்தளித்து, 3 பைகளையும் திறந்து காட்டச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மற்றும் விழுப்புரரத்தில் 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை முதல் ரெய்டு: விழுப்புரத்தில் கிழக்கு சண்முகாபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொன்முடியின் வீட்டில் உள்ள பீரோ மற்றும் லாக்கரின் சாவி இல்லாததால் நீண்ட நேரம் அதிகாரிகள் காத்திருந்தனர். பீரோ சாவி இல்லை என அமைச்சர் பொன்முடியின் உதவியாளர் தெரிவித்த நிலையில், சல்லடை போட்டு துழாவினர்.
பின்னர் போலி சாவி தயாரிக்கும் நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் வரவழைத்தனர். போலி சாவி மூலம் பீரோ, லாக்கரை திறக்க அதிகாரிகள் முயற்சித்தனர். பீரோ திறக்கப்பட்ட நிலையில், லாக்கரை திறப்பதற்கு முயற்சி செய்தும் திறக்க முடியாததால், பீரோவை மட்டும் திறந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுகவினர் வாக்குவாதம்: இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது அவர்களிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் இருந்து மூன்று பைகளை பொன்முடியின் வீட்டிற்குள் எடுத்து சென்றனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் பைகளில் என்ன இருக்கிறது என திறந்து காட்டினால் தான் உள்ளே விடுவோம் எனக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளை சுற்றி வளைத்தனர். திமுகவினரின் வாக்குவாதத்தை மீறி அவர்கள் பைகளை உள்ளே கொண்டு சென்ற நிலையில், அமலாக்கத்துறை சோதனையை தொடரக்கூடாது என வலியுறுத்தி திமுகவினர் சத்தம் போட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
3 பேக்: இதையடுத்து, உள்ளே கொண்டு சென்ற ஒரு பையை கொண்டு வந்து திறந்து காட்டினர். தொடர்ந்து, அங்கிருந்து திமுகவினரை கலைந்து செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனினும், உள்ளே 3 பைகளை கொண்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே வந்து செல்வதற்கும் அங்கிருந்த திமுகவினர் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications