ஐயயோ.. தேர்தலில் மனைவி தோல்வி.. அதிமுக வேட்பாளரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி தேர்தலில் 19வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மனைவி தோல்வியடைந்த நிலையில் மனம் உடைந்த அவரது கணவரான மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பெரும்பாலானா மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கைப்பற்றி உள்ளது. திமுகவின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் உள்பட பிற கட்சிகளும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தேர்தல் அதிமுகவுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் சேலம் மாவட்டம், அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் திமுக தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது. அதேநேரத்தில் தனித்து போட்டியிட்ட பாஜகவும் குறிப்பிட்ட வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மனைவி தோல்வியடைந்ததால் அவரது கணவர் தற்கொலை செய்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

சாத்தூர் நகராட்சி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சுகுணா(வயது 52). இவரது கணவர் நாகராஜ் (58). இவர் சாத்தூர் நகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். சுகுணா சாத்தூர் நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்று கொள்ளப்பட்டது.
இதையடுத்து அவர் தனது வார்டில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மனைவி சுகுணாவை வெற்றி பெற செய்ய நாகராஜூம் தீவிரமாக தேர்தல் பணி செய்து வந்தார்.

சுகுணா தோல்வி
இந்நிலையில் பிப்ரவரி 19ல் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது சாத்தூர் நகராட்சியிலும் எதிரொலித்தது. இங்குள்ள24 வார்டுகளில் 18 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வென்றனர். அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வென்றத. 19வது வார்டில் போட்டியிட்ட சுகுணா தோல்வியை தழுவினார். இந்த வார்டில் மொத்தம் 930 வாக்குகள் பதிவானது. இதில் சுகுணா 215 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சுபிதாவிடம் தோல்வியடைந்தார்.

கணவர் தற்கொலை
இதனால் சுகுணாவும், அவரது கணவர் நாகராஜூம் மனம் உடைந்தனர். விரக்தியின் உச்சத்துக்கு சென்ற நாகராஜ் திடீரென்று விஷம் குடித்தார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீடண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சி்கிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

சோகம்
இந்த சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நகராட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மனைவி தோல்வியடைந்ததில் மனம் உடைந்து கணவர் நாகராஜ் தற்கொலை செய்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications