தேர்தல் முடியட்டும்.. ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படும்.. முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்
விருதுநகர்: தேர்தல் முடிந்தவுடன் ஏழை மக்களுக்கு 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில், தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பேசிய அவர், மத்தியில் பதவிகளைப் பெற வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், மக்கள் நலனுக்காகவே கூட்டணி அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அராஜகம் தலைதூக்கும்
திமுக ஆட்சி அமைத்தால் நாட்டையே பட்டா போட்டு விற்று விடுவார்கள் என்று விமர்சனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் திமுக வெற்றிபெற்றால் அராஜகம் தலைதூக்கும் என்றார்.

பாதுகாப்பு இல்லை
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அதற்குக் காரணம் திமுக தான் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சி தலைவரும் பிரதமர் ஆகும் கனவில் உள்ளதாகவும் பேசினார்.

மக்கள் நலனுக்காக
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம் என்று உறுதி அளித்த முதலமைச்சர் பழனிசாமி, மத்தியில் பதவிகளைப் பெற வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை; மக்கள் நலனுக்காகவே கூட்டணி அமைத்துள்ளோம் என்று விளக்கம் அளித்தார்.

தகுந்த பாடம் புகட்டுங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை தொடர்ந்து செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார். தேர்தல் மூலம் அதிமுக ஆட்சியை கலைக்க துடிக்கும் திமுகவிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். தேர்தல் முடிந்தவுடன் ஏழைகளுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications