தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்! அதிமுக எழுச்சியை திமுகவால் தாங்கமுடியவில்லை -மாஃபா பாண்டியராஜன்
விருதுநகர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அதிமுக மிகுந்த எழுச்சியோடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவதை திமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

மாஃபா.பாண்டியராஜன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மிகுந்த எழுச்சியோடு ஈபிஎஸ் தலைமையில் செயல்படுவதை திமுகவால் தாங்க முடியவில்லை என்றார். ஆணையங்களின் அறிக்கையை ஆயுதங்களாக பயன்படுத்த திமுக முயற்சித்து வருவதாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சந்தேகத்தை எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான அறிக்கையும் தவறாக உள்ளது எனக் கூறிய மாஃபா பாண்டியராஜன், எடப்பாடி பழனிசாமி தான் சுடச் சொன்னார் என்பது போன்ற தோற்றம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை எனத் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகுந்த மோசமான நிலையில் இருப்பது முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சிக்கு தெரியும் எனக் கூறினார் மாஃபா பாண்டியராஜன்.

மாவட்டச் செயலாளர்கள்
சைலேந்திரபாபு போல ஒரு நல்ல போலீஸ் ஆபீஸர் இருந்தும் அவரது கரங்கள் கட்டப்பட்டிருப்பதாக விமர்சித்த அவர், திமுககாரர்கள் காவல் நிலைய விவகாரங்களில் தலையிடுகிறார்கள் என குற்றஞ்சாட்டினார். இன்று காவல்துறையின் முழு பொறுப்பும், அதிகாரமும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கரங்களுக்கு சென்று விட்டதாக மாஃபா வேதனைத் தெரிவித்தார்.

நானும் ஒருவன்
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலாவின் குடும்பம் அங்கு ஆக்கிரமித்து இருந்தது என்பதை யாராலும் மறக்க முடியாது என்றும் அதை எதிர்த்து போராடிய அப்போதைய அமைச்சர்களில் நானும் ஒருவன் எனவும் கூறினார்.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications