"தங்கச்சி" முறை.. 10 வயசு பிஞ்சு வேற.. ஒதுக்குப்புறத்தில் நடந்த கொடுமை.. டிரைவரை தட்டிதூக்கிய போலீஸ்
தங்கையை அண்ணன் பலாத்காரம் செய்துள்ளார்
விருதுநகர்: தங்கச்சி அதாவது பெரியம்மா மகளையே நாசம் செய்துவிட்டார் அந்த கார் டிரைவர்.. இத்தனைக்கும் அந்த தங்கைக்கு வயது வெறும் 10தான்..!
மதுரையை சேர்ந்தவர் ராஜா... இவர்தான் அந்த கார் டிரைவர்.. ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது பெரியம்மா மகளுக்கு 10 வயதுதான் ஆகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கொடுமை நடந்துள்ளது.. கூல்டிரிங்ஸ் வாங்கி தருவதாக சொல்லி, தங்கச்சியை பைக்கில் அழைத்து சென்றுள்ளார்..

சிறுமி
ஆனால், அன்னைக்கு முழுக்க அந்த குழந்தை வீட்டுக்கு வரவே இல்லை.. ராஜா மட்டும்தான் வந்தார்.. இதனால், ராஜாவிடம் சிறுமியின் பெற்றோர் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர்.. அதற்கு அவர் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி உள்ளார். உன்கூட தானே பைக்கில் கூட்டி சென்றாய் என்று கேட்டதற்கும் அவர் மழுப்பலான பதிலை சொல்லி இருக்கிறார்.

விசாரணை
இதனால், அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், ராஜா மீது அவனியாபுரம் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் ராஜாவை அழைத்து விசாரித்தனர்.. போலீசாரிடமும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார் ராஜா... இதனிடையே, போலீசாருக்கு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஸ்டேஷனில் இருந்து ஒரு போன் வந்தது..

மயக்க மாத்திரை
அதில், காரியாபட்டி புறநகர் பகுதியில் ஒரு சிறுமி தனியாக அழுது கொண்டிருந்ததாகவும், அதை கண்ட அந்த பகுதி மக்கள் குழந்தையை தங்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்ததாகவும் சொன்னார்கள். அப்போதுதான், அந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.. குழந்தைக்கு ஜூஸ் வாங்கி தருவதாக சொல்லி பைக்கில் அழைத்து ராஜா, அந்த ஜூஸில் மயக்க மாத்திரைகளை கலந்து தந்துள்ளார்..

கண்ணீர்
மயங்கிகிடந்த சிறுமியை காரியப்பட்டியில் உள்ள ஒரு ஆள் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளார்... அங்கு பாதி மயக்கத்தில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது வலி தாங்காமல் சிறுமி விழித்துக்கொள்ளவே பதறிப்போய் உள்ளார் ராஜா.. தங்கையை அங்கேயே விட்டுவிட்டு அவனியாபுரத்துக்கு வந்துள்ளார்.. அப்பகுதியில் கதறி அழுது கொண்டிருந்த சிறுமியை கண்ட அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து காரியாபட்டி ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர்.

வாக்குமூலம்
இந்நிலையில், அவனியாபுரம் போலீசார் சிறுமியை மீட்டனர், வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டனர்.. ராஜா மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து கைது செய்து தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. தங்கை முறை கொண்ட குழந்தையை அண்ணனே கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications