வேறு சாதி.. வெடித்த காதல் பிரச்சனை.. ராஜபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே மரத்தில் பிணமாக தொங்கிய இளைஞர்
ராஜபாளையம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
விருதுநகர்: தான் காதலித்த வேறு சாதி பெண்ணை, வீட்டை விட்டு இளைஞர் அழைத்து சென்றிருந்த நிலையில், தற்போது அவர் மரத்தில் பிணமாக தொங்கி உள்ளார்.. இது கொலையா? தற்கொலையா? என ராஜபாளையம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது அக்கரைப்பட்டி கிராமம்... இங்கு வசித்து வந்தவர் மகேந்திரன்.. 23 வயதாகிறது.. இவர் ஒரு கொத்தனார்.. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். 2 பேரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இதனால் வீட்டில் கல்யாணத்துக்கு மறுப்பு சொல்வார்கள் என்று நினைத்து 2 பேருமே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.. அதன்படி, மகேந்திரன் தன் காதலியை ராஜபாளையம் புது பஸ் ஸ்டேண்ட் அருகில் உள்ள தன் பெரியம்மா வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இதனிடையே பெண்ணை காணாமல், அவர்கள் வீட்டில் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில், மகேந்திரனும், காதலியும் நேற்று மதியம் ஸ்டேஷன் சென்றனர்.. அப்போது, பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைக்க போலீசார் வலியுறுத்தியதாக தெரிகிறது... காதலியை அவர்களுடன் ஒப்படைத்துவிட்டு தன் பெரியம்மா வீட்டுக்கு சோகமாக வந்தார் மகேந்திரன்.
ஸ்வப்னா எங்கே.. தங்கம் கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு.. விரட்டும் எதிர்க்கட்சி.. கிலியில் கேரள அரசு
ஆனால் நேற்று சாயங்காலம் முதல் மகேந்திரனை காணவில்லை.. அதனால் உறவினர்கள் பதட்டமடைந்து பல இடங்களில் தேடினர்.. இன்று காலை ராஜபாளையம் புது பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் மகேந்திரன் சடலமாக தொங்கி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.. ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தற்கொலையா கொலையா என தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. ஆனால் மகேந்திரனின் உறவினர்களோ "பெண் வீட்டில் போனில் மிரட்டினர்.. அப்பறம்தான் இந்த கொலை நடந்துள்ளது.. இதை கொலை வழக்காக போலீசார் பதிய வேண்டும்" என போலீசாரிடம் வலிறுத்தி வருகின்றனர்.