ஆதரவற்ற 231 குழந்தைகளுக்கு தீபாவளி டிரெஸ் எடுத்துக் கொடுத்த திமுக MLA! மொத்தச் செலவு ரூ.3,15,000!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், ஆதரவற்ற 231 குழந்தைகளுக்கு தீபாவாளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக தனது சட்டமன்ற உறுப்பினர் மாத ஊதியத்தில் இருந்து தொடர்ச்சியாக புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வரும் இவர், இந்தாண்டு 7வது முறையாக புத்தாடைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மூன்று மாத ஊதியத்தை மொத்தமாக சேர்த்து வைத்த அவர், ரூ.3,15,000 செலவில் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். 2வது முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் இந்தாண்டுடன் சேர்த்து 7 ஆண்டுகளாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவாளி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வருகிறார். ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், பொன்னகரம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், Light of life குழந்தைகள் காப்பகம் , என 3 ஆதரவற்றோர் காப்பகங்களை சேர்ந்த 231 குழந்தைகளை தன்னுடன் ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்ற அவர் அவர்கள் விரும்பிய புத்தாடைகளை வாங்கி தந்துள்ளார்.
ஆதரவற்ற காப்பகத்தை சேர்ந்த பிள்ளைகளை தனது சொந்தப் பிள்ளைகள் போல் கருதி அவ்வப்போது அவர்களுக்கு தேவையான உதவிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆதரவற்ற குழந்தைகளும் ஆனந்தமாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக புதிய ஆடைகள் வாங்கித் தந்த திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதரவற்ற குழந்தைகள் தானே கொடுப்பதை வாங்கிக் கொள்ளட்டும் என்று நினைக்காமல் அவர்களையும் ராஜபாளையத்தில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் துணிக்கடைக்கு அழைத்துச் சென்று யார் யாருக்கு என்னென்ன ஆடைகள் பிடித்ததோ அந்த ஆடைகளை விலையை பற்றி கவலைப்படாமல் வாங்கிக் கொடுத்துள்ளார் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன்.












Click it and Unblock the Notifications