விதிமீறலால் பறிபோன 23 உயிர்கள்.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் என்ன நடந்தது? கலெக்டர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 23 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் ஆலையில் விதியை மீறி பணி நடந்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவலை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று பட்டாசு ஆலையில் 30க்கும் அதிகமானவர்கள் வேலை செய்தனர். இன்று மாலையில் திடீரென்று பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நடந்தது. பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.

virudhunagar cracker unit

23 பேர் பலி

கட்டடங்கள் வெடித்து சிதறின. பட்டாசு ஆலை வெடித்ததில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்பாது வரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே தான் மீட்பு பணி நடந்தபோதும் மீண்டும் விபத்து நடந்தது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் போலீஸ்காரர்கள், தீயணைப்பு வீரர்கள் என மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் காயமடைந்துள்ளனர்.

மாவட்ட கலெக்டர் விளக்கம்

இந்நிலையில் தான் விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து பற்றி மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: இன்று மாலையில் பட்டாசு ஆலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர். இதில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதி்ல 16 பேர் பெண்கள். 3 பேர் ஆண்கள். இதுதவிர 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேர் 85 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளிக்க மதுரை, திருநெல்வேலியில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ்காரர்கள் - தீயணைப்பு வீரர்கள் காயம்

அதேபோல் மீட்பு பணியின்போது எதிர்பாராத விதமாகவும்விபத்து நடந்தது. இதில் 5 போலீஸ்காரர்கள், 3 தீயணைப்பு வீரர்கள், ஜேசிபி டிரைவர்கள் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அதிர்ஷ்டவசமாக ஆபத்தான நிலையில் இல்லை. விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு லைசென்ஸ் உள்ளது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை வேலைகள் நடக்க கூடாது. அந்த வகையில் விதிமீறல் நடந்துள்ளது.

தொழில் பாதுகாப்பு விதிமுறைகள்

இதுதொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக பட்டாசு உற்பத்தி உள்ளது. இதனால் தொழில் பாதுகாப்பு விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. எஸ்ஓபி அடிப்படையில் தான் புதிய ஆலைகளுககு அனுமதி வழங்கப்படுகிறது. இதுதவிர ச சிறப்பு படைகள் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+