ஜெ. இருந்திருந்தால் பாஜகவுடன் சேர்ந்திருக்க மாட்டார்.. அதிமுக பணிந்துவிட்டது.. ஸ்டாலின் தாக்கு!
அதிமுகவை மிரட்டி, ரெய்டு நடத்து பாஜக அதனுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விருதுநகர் கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
விருதுநகர்: அதிமுகவை மிரட்டி, ரெய்டு நடத்து பாஜக அதனுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்துள்ளது, ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்து இருக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விருதுநகர் கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக தென்மண்டல மாநாடு தற்போது விருதுநகரில் நடந்தது. விருதுநகரில் உள்ள பட்டம்புதூரில் இந்த மாபெரும் மாநாடு நடந்தது.
இதில் திமுகவினர் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மற்றும் பாஜகவை மிக கடுமையாக தாக்கி பேசினார்.

மோடி கோட்டம்
ஸ்டாலின் தனது பேச்சில், இன்று சென்னையில் பிரதமர் மோடி பேசிய கூட்டம் நடந்தது. அதை டீவியில் பார்த்தேன். திமுக - காங்கிரஸ் கூட்டணியை மோடி சந்தர்பவாத கூட்டணி என்கிறார். நாங்கள் பல ஆண்டுகளாக இந்த கூட்டணியில் இருக்கிறோம். தேர்தல் இல்லாத நேரத்திலும் நாங்கள் நட்பாக இருந்துள்ளோம்.

ஆபத்து வரும்
இந்தியாவிற்கு ஆபத்து வரும்போதெல்லாம் நாங்கள் ஒன்றாக இருந்துள்ளோம். நீங்கள் வைத்த கூட்டணியை நாங்கள் எப்படி அழைப்பது. குட்கா ஊழல், சிபிஐ, ஐடியை வைத்து மிரட்டி கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணியை எப்படி அழைக்க வேண்டும் என்று மோடியே சொல்லட்டும்.

ஆட்சிக்கு வந்தால்
மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வளம் பெறும் என்று ஓபிஎஸ் சொல்கிறார். அப்போது நாட்டின் தற்போதையை பிரதமர் யார்? : வளர்ச்சி எங்கே?. ஜெயலலிதா பாஜக உடன் கூட்டணி வைத்து இருப்பார் என்றும் ஓபிஎஸ் சொல்கிறார். மோடியா? லேடியா? என்று கேட்டவர்தானே ஜெயலலிதா?. அவரா பாஜகவுடன் கூட்டணி வைப்பார்?. பலமுறை பாஜக அழைத்தும் அவர்களுடன் கூட்டணி வைக்காதவர் ஜெயலலிதா.

வெட்கம்
அதிமுகவினருக்கு வெட்கமாக இல்லையா?. எத்தனை முறை உங்கள் வீட்டில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் வீட்டில் கூட சோதனை நடத்தினார்களே. உங்களை பாஜக எப்படி மிரட்டி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா.












Click it and Unblock the Notifications