விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து.. மாவட்ட நிர்வாகம் அதிரடி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில், அடிக்கடி வெடிவிபத்து சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 20 பட்டாசு ஆலைகளில் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான தொழிலாக பட்டாசு தொழில் உள்ளது. இந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக்கிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து சம்பவங்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த பட்டாசு தொழிலை நம்பி சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த தொழில் மற்றும் தொழிலாளர்கள் மூலமாக கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 14 தொழிலாளர்கள் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகளை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலில் ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல, மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்மேன்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலக பாதுகாப்புத் துறை சார்பில், பாதுகாப்பு குறித்த செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்காத 215 ஆலைகளுக்கு 16 லட்சத்துக்தும் மேல் அபராதம் விதிக்கப்பட்டு பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் 195 ஆலையினர் பங்கேற்றனர்.
இந்நிலையில், விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications