மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் ஷாக்.. அருப்புக்கோட்டையில் அப்பளமான லாரிகள்.. 3 பேர் பலி
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் இன்று காலை கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் ஓட்டுநர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை என்பது மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதியாகும்.இந்த சாலையில் எப்போதுமே கண்டெய்னர் வானங்கள் அதிக அளவில் செல்லும். தென்மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலை வழியாக தூத்துக்குடிக்கு எடுத்துச்செல்லப்படுவது வழக்கம்.

இதனால் இந்த சாலையில் அதிக அவல் கண்டெய்னர் லாரிகள் பயணிக்கும். இந்த சூழலில் இந்த சாலையில் சென்ற கண்டெய்னர் லாரியும். சரக்கு லாரியும் இன்று காலை எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு கிளினர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரின் முன்பாகம் மற்றும் சரக்கு லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கின. விபத்தில் சிக்கியவர்களை எளிதில் மீட்கவே முடியாத அளவிற்கு சிக்கி கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அருப்புக்கோட்டை போலீசார், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கு என்ன காரணம்? யார் மீது தவறு என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியும். பொதுவாகவேபெரிய வாகனங்களை அதிகாலை நேரங்களில் ஓட்டுவோர் கவனமாக ஓட்ட வேண்டும். தூக்கம் வந்தால் ஓரம் கட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரிய விபத்துகள் ஏற்பட காரணமாகிவிடும். இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை..












Click it and Unblock the Notifications