விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பழிக்கு பழி.. 3 வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற 2 பிஞ்சுகள்.. அப்படியே அதிர்ந்து போன சிவகாசி

3 வயது குழந்தையை 2 சிறுவர்கள் கொலை செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

விருதுநகர்: 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கின்றனர் 2 சிறுவர்கள்... இந்த கொடூரம் சிவகாசியில் நடந்துள்ளது.

சிவகாசி அடுத்த விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் பார்த்திபன் - கவியரசி.. இந்த தம்பதிக்கு 10 வயதில் பிரியதர்சன் என்ற மகனும், மூன்றரை வயதில் தீனதயாளன் என்ற மகனும் இருந்தனர்.

3 நாட்கள்தான்.. ஆளுநராக சனிக்கிழமை பதவி ஏற்கும் ஆ.என் ரவி.. களமிறக்கப்பட்டது ஏன்? என்ன காரணம்?3 நாட்கள்தான்.. ஆளுநராக சனிக்கிழமை பதவி ஏற்கும் ஆ.என் ரவி.. களமிறக்கப்பட்டது ஏன்? என்ன காரணம்?

பார்த்திபன் ஒரு டிரைவர்.. கவியரசி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கேன்டீனில் வேலை பார்த்து வருகிறார்..

 விளையாட்டு

விளையாட்டு


இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் அல்போன்சா... இவர் வீடு கட்டுவதற்காக வீட்டிற்கு பின்பக்கம் மணல் இறக்கி வைத்துள்ளார்... அந்த மணலில் பார்த்திபனின் மகன் தீனதயாளன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான்.. இதை பார்த்த அல்போன்சா சத்தம் போட்டுள்ளார்... இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் அல்போன்சாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 அல்போன்சா

அல்போன்சா

இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இரு குடும்பத்தினருக்கும் சண்டையாக மாறியது.. இதில் ஆத்திரமடைந்த அல்போன்சாவின் பேரன்கள் பிரவீன்குமார் 13 வயது, அஜய் 11 வயது, இருவரும் சேர்ந்து பார்த்திபனின் மகன் தீனதயாளனை கடைக்கு வருமாறு அழைத்து சென்றுள்ளனர்... இதற்கு பிறகுதான், தீனதயாளனை காணோம் என்று அவரது பார்த்திபனும், அவரது மனைவியும் தேட ஆரம்பித்தனர்..

 விசாரணை

விசாரணை

எங்குமே குழந்தை கிடைக்கவில்லை.. இதனால், வேறு வழியில்லாமல், தம்பதி இருவரும் சிவகாசி ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் போலீசார் அல்போன்சாவின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்தனர்... அப்போதுதான், பிரவீன் குமார், அஜய் இரு சிறுவர்களும், 4 வயது குழந்தை தீனதயாளனை விஸ்வநத்தம் பகுதியில் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்...

 சடலம்

சடலம்

இதை கேட்டு அதிர்ந்த போலீசார் அந்த கிணற்றுக்குள் சென்று பார்த்தனர்.. அப்போது குழந்தையின் உடல் சடலமாக மிதந்து கொண்டிருந்தது.. பின்னர், சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். 2 சிறுவர்களை போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். பழிவாங்குவதற்காக மூன்றரை வயது குழந்தையை இரு சிறுவர்கள் ஒரு கொலையை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Two boys killed 3 year old child due to prejudice near Virudhunagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X