விருதுநகரில் காலையில் மகிழ்ச்சியாக கல்லூரிக்கு சென்ற மாணவன்.. மாலையில் இப்படியாக ஆகணும்?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவை சேர்ந்தவர் அங்குராஜ் என்பவருடைய மகன் ஆகாஷ்க்கு 18 வயது ஆகிறது. இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி முடிந்து தனியார் பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பஸ் படிக்கட்டில் நின்று பயணித்த மாணவர் ஆகாஷ்க்கு சில நிமிடங்களில் நடக்கக்கூடாத சம்பவம் நடந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில், காரில் பயணிக்கும் போது மட்டுமல்ல.. பேருந்துகளில் பயணிக்கும் போது கவனமாக செல்ல வேண்டும்.. குறிப்பாக பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது கவனமாக செல்ல வேண்டும். ஏனெனில் படியில் பயணிக்கவேண்டிய நிலை வரலாம். படிக்கட்டில் பயணிக்கும் போது கூட்ட நெரிசலில் கீழே விழுக வாய்ப்பு உள்ளது. மேலும் படிக்கட்டில் நம்மை அறியாமல் தவறிவிழவும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சம்பவம் விருது நகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்துள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

பேருந்தில் பயணம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவில் வசிப்பவர் அங்குராஜ். இவருடைய மகன் ஆகாஷ்க்கு 18 வயது ஆகிறது. பள்ளிப்படிப்பை முடித்த ஆகாஷ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். வழக்கமாக கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவார் என கூறப்படுகிறது.
படியில் பயணம்
அப்படித்தான் நேற்று முன்தினம் ஆகாஷ் தனது கல்லூரிக்கு காலையில் சந்தோஷமாக சென்றுள்ளார். கல்லூரி முடிந்து மாலையில் தனியார் பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று பயணித்ததாக கூறப்படுகிறது.
ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம்
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் பகுதியில் பேருந்து சென்றபோது டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆகாஷ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் மணிகண்டனை (26) கைது செய்தனர்.
படிக்கட்டில் பயணிக்கும் போது, டிரைவர் திடீரென பிரேக் அடித்தால் நிலைகுலைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் பிரேக் பிடித்து உடனே வண்டி எடுத்தாலும் சட்டென தவறி விழுக வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை படியில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications