Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகரில் காலையில் மகிழ்ச்சியாக கல்லூரிக்கு சென்ற மாணவன்.. மாலையில் இப்படியாக ஆகணும்?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவை சேர்ந்தவர் அங்குராஜ் என்பவருடைய மகன் ஆகாஷ்க்கு 18 வயது ஆகிறது. இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி முடிந்து தனியார் பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பஸ் படிக்கட்டில் நின்று பயணித்த மாணவர் ஆகாஷ்க்கு சில நிமிடங்களில் நடக்கக்கூடாத சம்பவம் நடந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில், காரில் பயணிக்கும் போது மட்டுமல்ல.. பேருந்துகளில் பயணிக்கும் போது கவனமாக செல்ல வேண்டும்.. குறிப்பாக பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது கவனமாக செல்ல வேண்டும். ஏனெனில் படியில் பயணிக்கவேண்டிய நிலை வரலாம். படிக்கட்டில் பயணிக்கும் போது கூட்ட நெரிசலில் கீழே விழுக வாய்ப்பு உள்ளது. மேலும் படிக்கட்டில் நம்மை அறியாமல் தவறிவிழவும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சம்பவம் விருது நகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்துள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

What happened in the evening to the student who went to college happily in Virudhunagar in morning

பேருந்தில் பயணம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவில் வசிப்பவர் அங்குராஜ். இவருடைய மகன் ஆகாஷ்க்கு 18 வயது ஆகிறது. பள்ளிப்படிப்பை முடித்த ஆகாஷ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். வழக்கமாக கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவார் என கூறப்படுகிறது.

படியில் பயணம்

அப்படித்தான் நேற்று முன்தினம் ஆகாஷ் தனது கல்லூரிக்கு காலையில் சந்தோஷமாக சென்றுள்ளார். கல்லூரி முடிந்து மாலையில் தனியார் பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று பயணித்ததாக கூறப்படுகிறது.

ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் பகுதியில் பேருந்து சென்றபோது டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆகாஷ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் மணிகண்டனை (26) கைது செய்தனர்.

படிக்கட்டில் பயணிக்கும் போது, டிரைவர் திடீரென பிரேக் அடித்தால் நிலைகுலைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் பிரேக் பிடித்து உடனே வண்டி எடுத்தாலும் சட்டென தவறி விழுக வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை படியில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+