22 பணியாளர்களும் இந்தியர்கள் தான்.. அமெரிக்கா மேம்பாலத்தை சாய்த்த சரக்கு கப்பல் பற்றிய திடுக் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. கப்பல் மோதியும் மொத்த பாலமும் உருக்குலைந்தது தண்ணீக்குள் விழுந்தது. இந்நிலையில் தான் அந்த கப்பலின் குழுவில் (CREW) இருந்த 22 பேரும் இந்தியர்கள் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அமரிக்காவின் பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரும்பாலனா பிரமாண்டமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் தினமும் வாகனங்கள் சென்று வருகின்றனர்.

இந்த பாலத்துக்கு கீழே கப்பல்கள் சென்று வருகின்றன. ஒரே நேரத்தில் பாலத்தின் மேல்புறம் கார் உள்ளிட்ட வாகனங்களும் கப்பலுக்கு கீழே ஆற்று தண்ணீரில் கப்பல்களும் செல்வதை நாம் பார்க்கலாம்.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் நேரப்படி இன்று அதிகாலை 1.35 மணியளவில் பல்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியது. அதாவது பாலத்தின் ஒரு பகுதியில் சரக்கு கப்பல் பயங்கரமாக மோதியது. இதனால் அந்த மொத்த பாலமும் உருக்குலைந்துபோனது. அதாவது கப்பல் மோதிய வேகத்தில் பாலம் அப்படியே நொறுங்கி தண்ணீருக்குள் விழுந்தது.
இதனால் பாலத்தில் சென்ற வாகனங்கள் தண்ணீருக்குள் விழுந்தன. ஹாலிவுட் பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்த விபத்து நடந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மேலும் விபத்து நடந்தவுடன் மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரில் தத்தளித்தவர்களை அவர்கள் மீட்டனர் .
இந்நிலையில் தான் பாலத்தில் மோதிய சரக்கு கப்பல் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ‛டாலி' எனும் பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் சென்று விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கப்பலின் கொள்ளளவு என்பது 10,000 டிஇயூவாகும். ஆனால் விபத்து நடந்தபோது கப்பலில் 4,679 டியூயூ அளவில் சரக்கு இருந்துள்ளது. இந்த கப்பல் கிரேஸ் ஓஷன் பிரைவேட் லிமிடெட் எனு் நிறுவனத்தை சேர்ந்தது.
இந்த கப்பலில் உள்ள குழுவில் இருக்கும் அனைவரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ள. அதாவது கப்பலை இயக்கும் குழுவில்(Crew) அங்கம் வகிக்கும் 22 பேரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை சினர்ஜி மரைன் குழு உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில் கப்பல் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்த கப்பல் பால்டிமோரில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டபோது விபத்தில் சிக்கி உள்ளது. இருப்பினும் கப்பல் எப்படி மேம்பாலத்தின தூணில் மோதியது அதற்கான காரணம் என்ன ? என்பது இன்னும் வெளிவரவில்லை.
இத்தகைய சூழலில் தான் அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கப்பல் எப்படி மேம்பாலத்தின் மீது மோதியது? கப்பலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications