"அதிர்ந்த அலாஸ்கா.." 7.4 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கே இருக்கும் மாகாணம் அலாஸ்கா.. இந்த அலாஸ்காவில் இப்போது திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 7.4% பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் முகாமிட்டுள்ளனர். மேலும், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 9.3 கிமீ (5.78 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த அலாஸ்கா என்பது அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒன்று என்ற போதிலும், அது அமெரிக்காவில் இருந்து சற்று தள்ளியே இருக்கிறது. அதாவது அலாஸ்கா மட்டுமே கனடாவுக்கு மேல் வட துருவத்திற்கு மிக அருகில் இருக்கிறது. இப்படித் தனித்து இருந்தாலும் கூட இதுவும் அமெரிக்கா மாகாணங்களில் ஒன்று தான். இங்கே தான் இப்போது இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலாஸ்காவில் சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா தீபகற்பம், அலுடியன் தீவுகள் மற்றும் குக் இன்லெட் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், இதனால் அச்சத்தில் பொதுமக்களும் பலரும் வீடுகளை விட்டு வெளியேறினர். அதேநேரம் இந்த நிலநடுக்கத்தால் எந்தளவுக்குத் தேசம் ஏற்பட்டுள்ளது. யாராவது உயிரிழந்துள்ளனரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அலாஸ்கா மாகாணமும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பசிபிக் ரிங் ஆப் பயர் பகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலாஸ்கா 9.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏறப்பட்டது. வட அமெரிக்காவில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் இதுதான் வலிமையானதாகும்.
இதனால் சுனாமியும் ஏற்பட்ட நிலையில், அலாஸ்கா வளைகுடா, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே இப்போது அங்கே 7.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications