"அதிர்ந்த அலாஸ்கா.." 7.4 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கே இருக்கும் மாகாணம் அலாஸ்கா.. இந்த அலாஸ்காவில் இப்போது திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 7.4% பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் முகாமிட்டுள்ளனர். மேலும், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 9.3 கிமீ (5.78 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த அலாஸ்கா என்பது அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒன்று என்ற போதிலும், அது அமெரிக்காவில் இருந்து சற்று தள்ளியே இருக்கிறது. அதாவது அலாஸ்கா மட்டுமே கனடாவுக்கு மேல் வட துருவத்திற்கு மிக அருகில் இருக்கிறது. இப்படித் தனித்து இருந்தாலும் கூட இதுவும் அமெரிக்கா மாகாணங்களில் ஒன்று தான். இங்கே தான் இப்போது இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலாஸ்காவில் சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா தீபகற்பம், அலுடியன் தீவுகள் மற்றும் குக் இன்லெட் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், இதனால் அச்சத்தில் பொதுமக்களும் பலரும் வீடுகளை விட்டு வெளியேறினர். அதேநேரம் இந்த நிலநடுக்கத்தால் எந்தளவுக்குத் தேசம் ஏற்பட்டுள்ளது. யாராவது உயிரிழந்துள்ளனரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அலாஸ்கா மாகாணமும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பசிபிக் ரிங் ஆப் பயர் பகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலாஸ்கா 9.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏறப்பட்டது. வட அமெரிக்காவில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் இதுதான் வலிமையானதாகும்.
இதனால் சுனாமியும் ஏற்பட்ட நிலையில், அலாஸ்கா வளைகுடா, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே இப்போது அங்கே 7.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications