Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

56 வருடமாக வயிற்றில் கருவை சுமந்த பெண்.. எக்ஸ்ரேவில் காத்திருந்த ஷாக்! மருத்துவ உலகில் வினோத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 81 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில் 56 வருடங்களாக குழந்தையின் கரு இறந்த நிலையில் இருந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து கருவை அகற்றிய நிலையில், அந்த மூதாட்டி தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பிரேசில் நாட்டில் 81 வயதான மூதாட்டி ஒருவரின் வயிற்றில் இறந்த நிலையில், 56 வருடமாக இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். மருத்துவர்களையே அதிர வைத்த இந்த வினோத சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

81 year old woman in Brazil dies after undergoing surgery to remove a 56 year old foetus from her abdomen

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் டேனிலா வோரா. 81 வயதான இவருக்கு பல ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. எனினும், சமீப காலமாக வயிற்று வலி அதிகரித்ததால், மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

முதலில் சிறு நீர் தொற்று காரணமாக இருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள்.. வயிற்று வலி அதன்பிறகும் சரியாகாத காரணத்தால், ஸ்கேன் எடுத்து பார்த்தனர். இதில், அடி வயிற்று பகுதியில் இறந்த நிலையில் சிசு இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவ உலகில் ஸ்டோன் பேபி என்று இது அழைக்கப்படுகிறது. பெண்ணின் கருப்பையில் உருவாகாமல் கருப்பைக்கு வெளியே இந்த சிசு வளர்ந்து அதன்பிறகு இறந்துள்ளது.

இளம் பருவத்தில் முதல் முறையாக கருவுற்ற சமயத்தில் இந்த ஸ்டோன் பேபி உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கருப்பையை விட்டு வெளியில் வளர்வதால் இந்த கரு உயிரற்றதாகிவிடும். இறந்த பிறகு சில நாட்களில் ஸ்டோன் பேபியாக மாறிவிடும். டேனிலாவிற்கு 7 குழந்தைகள் அதன்பிறகு பிறந்துள்ளன. எனினும், அவருக்கு வயிற்றில் வலியானது தொடர்ச்சியாக இருந்துள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட வலி காரணமாகவே அவருக்கு இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வயிற்றில் 56 ஆண்டுகளாக இருந்த ஸ்டோன் பேபியை மருத்துவர்கள் அகற்றினர். எனினும் அதன்பிறகு ஏற்பட்ட தொற்று காரணமாக டேனிலா உயிரிழந்தார். டேனியலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இது தொடர்பாக கூறியதாவது:-

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட தொற்றின் காரணமாக அந்தப்பெண் உயிரிழந்தார். கருப்பைக்கு பதிலாக வெளியே கரு உருவாகும் சில அரிதான நிகழ்வுகள் நடந்துள்ளன. இதை எக்டோபிக் பிரகனன்சி என்று அழைப்பார்கள். கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே உருவாகும். அங்கு கருவினால் வளர முடியாது. அதேபோன்ற ஒரு அரிய கேஸ்தான் இது.

இதுபோன்ற நேரங்களில் அதிகப்படியான வலி அல்லது ரத்தப்போக்கு ஏற்படும். ஆனால், டேனியலுக்கு அதுபோன்று எதுவும் ஏற்படவில்லை. எக்ஸ்ரே எடுக்கும் வரை எந்த அறிகுறிகளும் வெளிப்படையாக தெரியவில்லை. திடீரென பெண்ணுக்கு அதிகப்படியான வலி ஏற்பட்டு அவர் உயிரிழக்கவும் செய்துவிட்டார் என்றார்"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+