50 ஆண்டுகால கனவு நிறைவேறியது.. நிலவை நோக்கி மற்றொரு பயணம்! அசத்திய நாசா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவுக்கு மனிதர்கள் சென்றிருந்தனர். அதன் பின்னர், நிலவு பற்றி யோசித்தோமே தவிர, அங்கு போக வேண்டும் என்று பெரிய அளவில் முயற்சிகளை எடுக்கவில்லை. இந்நிலையில், நாசா இதற்கான பயணத்தை திட்டமிட்டிருந்தது. இந்த பயணம் இன்று அதிகாலை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது.

ஆர்ட்டெமிஸ் II என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில், மொத்தம் 4 பேர் நிலவை நோக்கி பயணிக்கிறார்கள். இந்த விண்கலம், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.51க்கு, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்டான எஸ்எல்எஸ் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

Artemis II space moon

பயணத்தின் திட்டம்

இந்த பயணம் மொத்தம் 10 நாட்கள் நீடிக்கும். ஆர்ட்டெமிஸ் II விண்கலம், பூமியை இரண்டு முறை சுற்றி வரும். இப்படி சுற்றி வரும்போது, விண்கலத்தின் அனைத்து அமைப்புகளும் சரியாக வேலை செய்கிறதா? என்று சோதிப்பார்கள். பின்னர், நிலவை நோக்கி வண்டி திருப்பப்படும். நிலவின் மறுபக்கத்தை விண்கலம் சுற்றி வரும். கடைசியாக பத்திரமாக பூமியில் தரையிறங்கும்.

இது எல்லாம் சரியாக நடந்தால், எதிர்வரும் 2028ல் மனிதர்கள் ஆர்ட்டெமிஸ் III திட்டத்தின் மூலம் நிலவில் இறங்குவார்கள். அந்த வகையில் இந்த பயணம் மனித குலத்திற்கு மிக முக்கியமானதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+