அதானிக்கு பெரிய நிம்மதி! ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை நிராகரித்தது செபி.. வெளியிட்ட பரபர அறிக்கை
வாஷிங்டன்: இந்தியாவின் பெரும் தொழில் குழுமமான அதானி நிறுவனத்திற்கு பங்கு விலையை செயற்கையாக அதிகரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரபல அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்து, அதானிக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஹிண்டன்பர்க். ஷார்ட் செல்லிங் நிறுவனமான இது கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப் பெரியளவில் சரிந்தன. அதானி குழுமம் மட்டுமன்றி அமெரிக்காவின் நிக்கோலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் குறித்தும் இந்த அமைப்பு அறிக்கையை வெளியிட்டது.

இந்தியாவின் பெரும் தொழில் குழுமமாக உள்ள அதானி நிறுவனம், கணக்கு வழக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும், பங்கு விலையை செயற்கையாக அதிகரித்திருப்பதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்திற்கு பெரும் தலைவலியாக மாறின. அதானி குழும பங்குகள் 50% வரை சரிந்தன. எனினும், தங்கள் நிறுவனத்தின் மீது ஹிண்டன்பர்க் வைத்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது.
இந்த நிலையில், இந்தியாவின் பங்கு வர்த்தக ஒழுங்குமுறை அமைப்பான செபி, அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை என்று செபி தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு அரசியல் ரீதியாகவும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியில் ஆளும் பாஜகவை, இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்த நிலையில்தான், அதானி மீதான குற்றச்சாட்டை செபி நிராகரித்துள்ளது. இரண்டு உத்தரவுகளில் தனது முடிவுகளை வெளியிட்ட செபி, எந்த விதிமீறல்களும் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஏனெனில், இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில்லாத தரப்பினருடன் ஆன ஒப்பந்தங்கள் என்று வகைப்படுத்தப்படாத காலத்தில் நடந்தவை என செபி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வரையறை 2021 திருத்தத்திற்குப் பிறகு மாற்றப்பட்டது. அனைத்து கடன்களும் திருப்பிச் செலுத்தப்பட்டதாகவும், நிதி நோக்கம் கருதிய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், எந்த மோசடி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறையும் இல்லை என்றும் செபி குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications