Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரஷரை கொடுக்கும் டிரம்ப்.. ரஷ்யாவை தாக்கவே முடியாமல் முடங்கும் உக்ரைன்! அமெரிக்கா பிளான் தான் என்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் போர் விவகாரத்தில், அமைதி ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தியில் இருக்கிறார். இதற்கிடையே இந்தப் போர் விவகாரத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு மறைமுக அழுத்தத்தைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.. இதனால் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிடுவதில் உக்ரைனுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த மோதல் தொடங்கிய சமயத்தில் இருந்தே உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து வந்தது. ஆனால், டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு முதலில் ஆயுதங்களைத் தர மாட்டோம் என்றெல்லாம் சொல்லி வந்தார். இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டு வர புதின் பிடி கொடுக்காததால் மீண்டும் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் ஆயுதங்களைக் கொடுக்க ஆரம்பித்தது.

America Secretly Blocks Ukraine from Using US-Made ATACMS Missiles to Strike Russian Territory

திடீர் மாற்றம்

இதில் தான் இப்போது திடீர் மாற்றம் நடந்துள்ளது. அதாவது ரஷ்யாவிற்குள் தொலைதூரம் ஊடுருவி இலக்குகளைத் தாக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ராணுவ ஏவுகணை அமைப்புகள் உக்ரைனுக்கு டிரம்ப் நிர்வாகம் கொடுத்திருந்தது. ஆனால், இப்போது அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அமெரிக்க ராணுவம் ரகசியமாகத் தடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. வலிமையான ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது என்பதால் இது உக்ரைனுக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும்.

அமெரிக்கா அழுத்தம்

மூன்றாண்டுகளாக நடக்கும் இந்தப் போரில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியாததால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தியில் இருக்கிறார். இந்த நேரத்தில் அமெரிக்க ராணுவம் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக வெளியாகும் தகவல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி டிரம்ப் - புதின் இடையே உச்ச மாநாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்களையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் டிரம்ப் சந்தித்துப் பேசியிருந்தார். அதன் பிறகு போர் முடிவுக்கு வந்ததாக நல்ல செய்தி வரும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், அதன் பிறகு அதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.

டிரம்ப்

இதனால் அதிருப்தி அடைந்துள்ள டிரம்ப், ரஷ்யா மீது கூடுதலாகப் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறினார். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் சீக்கிரம் ஒரு முடிவை எடுக்கப் போகிறேன்.. அது மிக முக்கியமான முடிவாக இருக்கும். அது பெரிய பொருளாதாரத் தடைகளாக இருக்கலாம்.. அல்லது பெரிய வரிகளாக இருக்கலாம்.. அல்லது இரண்டுமே கூட இருக்கும்" என்று பேசியிருந்தார்.

சிக்கல் என்ன!

டிரம்ப் புதின் இடையே நடந்த உச்சி மாநாட்டில் போர் நிறுத்தம் செய்ய புதின் சில கட்டுப்பாடுகளை விதித்தாக கூறப்படுகிறது. குறிப்பாகச் சில பிராந்தியங்களை ரஷ்யாவுக்கு ஒப்படைக்க வேண்டும். நேட்டோவில் இணையக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை புதின் விதித்துள்ளார். இதில் மற்ற கட்டுப்பாடுகள் கூட ஓகே என்றாலும் பிராந்தியங்களை விட்டுத் தரும் வகையில் அமைதி ஒப்பந்தம் எதற்கும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பதை ஜெலன்ஸ்கி தெளிவாகக் கூறிவிட்டார்.

இதுபோல பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டே இருப்பதால் தான் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்தச் சூழலில் தான் உக்ரைனுக்கு அமெரிக்கா மறைமுகமாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+