மக்களே கவனம்.. வாட்ஸ் அப்பில் சம்பந்தமே இல்லாமல் வரும் வெளிநாட்டு கால்ஸ்.. சிக்காமல் இருப்பது எப்படி
வாஷிங்டன்: வாட்ஸ் அப்பில் கடந்த சில தினங்களாக பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் பெரும்பாலும் மிஸ்டு கால்களாக வருவதாக பயனர்கள் பலரும் கூறி வருவதை காண முடிகிறது. இது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ் அப் இல்லாத ஸ்மார்ட் போன்களையே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மக்கள் மத்த்தியில் வாட்ஸ் அப் பயன்பாடு அதிகமாக உள்ளது. உலக அளவில் 2 பில்லியனுக்கும் மேற்பட்டோர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர்.

குறுஞ்செய்தி பரிமாற்றம் தொடங்கி முக்கிய கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடிவதால் தற்போது வாட்ஸ் அப் பயன்பாடு அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் குருப் கிரியேட் செய்து தங்கள் நட்பு வட்டங்களுக்குள் அரட்டை அடிப்பதில் தொடங்கி அலுவலக பயன்பாடு வரைக்கும் வாட்ஸ் அப் முக்கிய பங்கு வகிக்கிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். வாட்ஸ் அப் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிக அளவில் உள்ள நிலையில், வாட்ஸ் அப் மூலமாகவும் சமீப காலமாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
வாட்ஸ் அப்பிற்கு சில லிங்குகளை அனுப்புவது..அதை கிளிக் செய்யும் அப்பாவி மக்களிடம் இருந்து தகவல்களை திருடி அதன் மூலமாக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், முன் பின் தெரியாத எண்களில் இருந்து வரும் எந்த ஒரு சந்தேக மெசேஜ்களையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து திடீர் திடீரென அழைப்புகள் வாட்ஸ் அப்பில் வந்துள்ளது. குறிப்பாக எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிடம் இருந்தும் இதுபோன்ற பலருக்கும் வந்துள்ளது. சில வினாடிகள் மட்டுமே வந்து விட்டு தானாகவே கட் ஆகிவிடுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருவதை காண முடிகிறது.

வாட்ஸ் அப்பிற்கு வரும் இந்த சர்வதேச கால்கள் அந்த நாட்டில் இருந்துதான் வருகின்றன என்று உறுதியாக சொல்ல முடியாது.ஏனெனில் இந்த இணையதள அழைப்புகள் மூலமாக வருவதால் அந்த நாட்டில் இருந்து வருகிறது என்று நினைக்கக் கூடாது. இந்த எண்கள் மோசடியாளர்கள் எங்காவது ஒரு இடத்தில் இருந்து கொண்டு மொத்தமாகவும் இயக்ககூடியதாகவும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதுபோன்ற அழைப்புகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் கேட்கிறீர்களா? இதற்கு சிம்பிளான ஒரே விஷயம்தான் உள்ளது. இந்த அழைப்புகளை பற்றி அப்படியே புறக்கணித்து விட வேண்டும். மிஸ்டு கால் வருவதால் மீண்டும் கால் செய்ய நினைக்கூடாது. பயனர்கள் இந்த எண்களை பிளாக் செய்வதோடு, ரிபோர்ட் செய்து விடலாம். இப்படி வரும் அழைப்புகளுக்கு நாம் பதிலளித்தால் நமது தகவல்கள் திருடப்படலாம் எனவும் இதன் மூலம் பல வகையான மோசடிகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications