மக்களே கவனம்.. வாட்ஸ் அப்பில் சம்பந்தமே இல்லாமல் வரும் வெளிநாட்டு கால்ஸ்.. சிக்காமல் இருப்பது எப்படி
வாஷிங்டன்: வாட்ஸ் அப்பில் கடந்த சில தினங்களாக பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் பெரும்பாலும் மிஸ்டு கால்களாக வருவதாக பயனர்கள் பலரும் கூறி வருவதை காண முடிகிறது. இது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ் அப் இல்லாத ஸ்மார்ட் போன்களையே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மக்கள் மத்த்தியில் வாட்ஸ் அப் பயன்பாடு அதிகமாக உள்ளது. உலக அளவில் 2 பில்லியனுக்கும் மேற்பட்டோர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர்.

குறுஞ்செய்தி பரிமாற்றம் தொடங்கி முக்கிய கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடிவதால் தற்போது வாட்ஸ் அப் பயன்பாடு அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் குருப் கிரியேட் செய்து தங்கள் நட்பு வட்டங்களுக்குள் அரட்டை அடிப்பதில் தொடங்கி அலுவலக பயன்பாடு வரைக்கும் வாட்ஸ் அப் முக்கிய பங்கு வகிக்கிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். வாட்ஸ் அப் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிக அளவில் உள்ள நிலையில், வாட்ஸ் அப் மூலமாகவும் சமீப காலமாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
வாட்ஸ் அப்பிற்கு சில லிங்குகளை அனுப்புவது..அதை கிளிக் செய்யும் அப்பாவி மக்களிடம் இருந்து தகவல்களை திருடி அதன் மூலமாக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், முன் பின் தெரியாத எண்களில் இருந்து வரும் எந்த ஒரு சந்தேக மெசேஜ்களையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து திடீர் திடீரென அழைப்புகள் வாட்ஸ் அப்பில் வந்துள்ளது. குறிப்பாக எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிடம் இருந்தும் இதுபோன்ற பலருக்கும் வந்துள்ளது. சில வினாடிகள் மட்டுமே வந்து விட்டு தானாகவே கட் ஆகிவிடுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருவதை காண முடிகிறது.

வாட்ஸ் அப்பிற்கு வரும் இந்த சர்வதேச கால்கள் அந்த நாட்டில் இருந்துதான் வருகின்றன என்று உறுதியாக சொல்ல முடியாது.ஏனெனில் இந்த இணையதள அழைப்புகள் மூலமாக வருவதால் அந்த நாட்டில் இருந்து வருகிறது என்று நினைக்கக் கூடாது. இந்த எண்கள் மோசடியாளர்கள் எங்காவது ஒரு இடத்தில் இருந்து கொண்டு மொத்தமாகவும் இயக்ககூடியதாகவும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதுபோன்ற அழைப்புகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் கேட்கிறீர்களா? இதற்கு சிம்பிளான ஒரே விஷயம்தான் உள்ளது. இந்த அழைப்புகளை பற்றி அப்படியே புறக்கணித்து விட வேண்டும். மிஸ்டு கால் வருவதால் மீண்டும் கால் செய்ய நினைக்கூடாது. பயனர்கள் இந்த எண்களை பிளாக் செய்வதோடு, ரிபோர்ட் செய்து விடலாம். இப்படி வரும் அழைப்புகளுக்கு நாம் பதிலளித்தால் நமது தகவல்கள் திருடப்படலாம் எனவும் இதன் மூலம் பல வகையான மோசடிகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications