கொரோனா வைரஸ் சூப்பர் வைரஸ்.. 2018-லேயே கணித்த மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ்!
Recommended Video
வாஷிங்டன்: சீனாவில் உயிர் பலியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்துள்ள தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் வவ்வாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் அவர்களுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.
இது வரை இந்த வைரஸ் பாதிப்பால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 2500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

சீனா
இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண் செவிலியர் ஒருவர் நேற்று பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாமல் சீனா தவித்து வருகிறது. அந்நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்வோர் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

ராஜஸ்தான்
இந்தியாவில் ராஜஸ்தான், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த இருவருக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அது போல் சீனாவிலிருந்து பெங்களூர் வந்த இருவருக்கு கடுமையான சளித் தொல்லையால் அவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூப்பர் வைரஸ்
இந்த நிலையில் இது போன்ற நோய் வரும் என்பதை மைக்ரோ சாப்ட் நிறுவனர் முன்பே கணித்துள்ளார். ஆம், அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மசாசூட்ஸில் உள்ள மருத்துவ சங்க கருத்தரங்கில் இதை பில்கேட்ஸ் தெரிவித்தார். அந்த கருத்தரங்கில் அவர் பேசுகையில் இந்த உலகம் முழுவதும் விரைவில் பரவும் சூப்பர் வைரஸால் பாதிக்கப்படவுள்ளது.

மக்களிடம் பதற்றம்
இந்த வைரஸ் நோய்க்கு முதல் 6 மாதங்களில் 3.30 கோடி பேர் பலியாகக் கூடும். அந்த வைரஸால் உலகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த வைரஸ் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மக்களிடம் பதற்றத்தை குறைக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications