"லீவ்" கேட்டது குத்தமா.. மூல நோய்க்கு ஊழியரிடம் ஆதாரம் கேட்ட மேனேஜர்! "அந்த" போட்டோ வந்ததால் பகீர்
வாஷிங்டன்: தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் மூல நோய் இருப்பதால் லீவ் கேட்டுள்ளார். அதற்கு அந்த மேனேஜர் ஆதாரம் கேட்ட நிலையில், அந்த நபர் தனது பின்புறத்தை போட்டோவாக எடுத்து அனுப்பி இருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்த அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களை நாம் புரட்டினால் அதில் நாம் கனவிலும் யோசிக்காத பல சம்பவங்களை நாம் பார்க்கலாம். இப்படி கூட நாம் நடக்குமா என யோசிக்காத பல சம்பவங்கள் இருக்கும்.

இங்கு அப்படி தான் விடுப்பு கேட்ட ஊழியர் ஒரு காரியம் செய்துள்ளார். இதில் அவர் மீது தப்பா இல்லை.. அவரது மேனேஜர் மீது தவறா எனப் பெரிய விவாதமே இணையத்தில் நடந்து வருகிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மூல நோய்: அதாவது ஊழியர் ஒருவர் தனக்கு மூலநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தனக்கு லீவ் வேண்டும் எனக் கேட்டுள்ளார். மூலநோய் மோசமானதால் அதீத வலி இருப்பதாகவும் தன்னால் நிற்கவே முடியாது என்றும் அவர் சொல்லி லீவ் கேட்டுள்ளார். இதைக் கேட்ட மேனேஜர், சரி உடம்பு சரி இல்லை என்று தானே சொல்கிறார் லீவ் தரலாம் என முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக ஆதாரத்தைக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஊழியர் செய்த செயல் தான் இப்போது விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ஆதாரத்தைக் கேட்டால் இவர் மருத்துவ சான்றிதழை அனுப்பி இருக்கலாம். அல்லது சிகிச்சை தொடர்பான டாக்குமெண்டுகளை பகிர்ந்து இருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக அவர் தனது பின்புறத்தை போட்டோவாக எடுத்து அனுப்பி இருக்கிறார். மூலநோய்க்கான ஆதாரத்தைக் கேட்டதால் இப்படிச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னாச்சு: இது தொடர்பாக ரெட்டிட் தளத்தில் மேலும் கூறுகையில், "எனக்கு மூல நோய் இருப்பதால் நிற்க முடியாது என்பதால் லீக் கேட்டார். மேனேஜர் ஆதாரத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்டார். இதனால் வேறு வழியின்றி மூலநோய் இருக்கும் பின்புறத்தை போட்டோ எடுத்து அனுப்பினேன்" என்று தெரிவித்தார்.
மேலும், "அனுப்பும் போது தவறு செய்தது போலத் தோன்றவில்லை.. ஆனால், இப்போது நினைத்தால் ஆபாச போட்டோ அனுப்பியதாகப் பிரச்சினை வருமோ என்று அச்சமாக இருக்கிறது. உதவுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்: இதற்கு இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் பலவித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தரப்பினர், "அவர் செய்தது என்ன தவறு.. உடம்பு சரி இல்லை என லீவ் கேட்டால் கொடுக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு கேள்வி கேட்டால் இப்படிதானே செய்ய முடியும்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் அவர் வேண்டுமென்றே இப்படிச் செய்யவில்லை என்றும் ஒரு வேகத்தில் இப்படிச் செய்து இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் மேனேஜர் மருத்துவ சான்றிதழைக் கேட்டதில் என்ன தவறு என்றும் இந்த ஊழியரே எல்லை மீறியதாகவும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதில் யார் மீது தவறு இருக்கு.. யார் செய்தது தவறு என நீங்க நினைக்கறீங்க.!












Click it and Unblock the Notifications