அமெரிக்க துணை அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா.. வெள்ளை மாளிகையில் பாதிப்பு 2ஆக உயர்வு
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளை மாளிகையில் இருவருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,21,707 ஆக உயர்ந்துள்ளது. அது போல் பலி எண்ணிக்கை 78 ஆயிரமாக உள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,23,578 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ராணுவ விவகாரங்களை கவனிக்கும் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர் ஸ்பெஷல் போர்ஸ் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்.
இதையடுத்து நேற்று முன் தினம் அவசர அவசரமாக அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. அது போல் துணை அதிபர் மைக் பென்ஸுக்கும் சோதனை நடத்தப்பட்டது. அவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் துணை அதிபர் மைக் பென்சின் செய்தி தொடர்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வெள்ளை மாளிகையில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications