கொரோனா தடுப்பூசி.. இந்த ஆண்டு இறுதிக்குள் வந்துவிடும்.. அமெரிக்க நிபுணர் தகவல்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ்க்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி வந்துவிடும் என்று நம்புவதாக அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் அந்தோனி பாணி தெரிவித்துள்ளார்..
Recommended Video
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், சீனா, ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகள் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தடுப்பூசிகள்
இதுவரை பல்வேறு நாடுகள் தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை உருவாக்கி அதை மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து பார்த்து வருகின்றன. சில தடுப்பூசிகளில் நல்ல பலன்கள் கிடைத்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சில தடுப்பூசிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தடுப்பூசி எப்போது வரும்
உலக சுகாதார மையம் இதுவரை எந்த ஒரு தடுப்பூசி மருந்தும் கொரோனாவுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் : கொரோனா வைரஸ்க்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி வந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் தலைவரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு எப்போது
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி விட முடியும். ஆனால் அதை பொதுமக்களுக்கு பரவலாக வினியோகிக்க கொஞ்ச காலம் ஆகும். தடுப்பூசிகளைப் பொறுத்தவரை நல்ல இடத்தில் தான் நாம் உள்ளோம். நாங்கள் நம்புகிறபடி நடந்து விட்டால், இந்த ஆண்டு இறுதியில் இருந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி வந்து விடும்.

எவ்வளவு காலம் நீடிக்கும்
இதுவரையில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புச்சக்தியை தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பது எது என்ற இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும். கொரோனா வைரஸ் எதிர்ப்புச்சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பதில் அளிக்க ஓராண்டோ அல்லது அதற்கு சற்று கூடுதலான காலம் ஆகலாம்" என்றார்.

நம்பிக்கை அளிக்கும் மாடர்னா
அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி குறித்து பேசிய அந்தோணி ஃபாசி, மாடர்னாவின் முடிவுகள் குறிப்பாக நம்பிக்கைக்குரியவை என்றும், அந்த தடுப்பூசி இயற்கையாகவே தொற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும் விஷயங்கள் காணப்படுகிறது என்றார். சீனாவில் தான் தொற்றுக்கு நோய்க்கு முதலில்மருந்துவரும் என்று நினைத்தேன். ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் திட்டமிட்ட காலத்திற்குள் மருந்து வந்து விடும் என்று உணர்கிறேன்" என்றும் ஃபாசி கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications