கொரோனா கோரத்தாண்டவம்.. பிரேசில் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி.. இந்தியா மீண்டும் கிடுகிடு
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் பிரேசில், அமெரிக்கா, மெக்ஸிகோவில் அதிகமாக உள்ளது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளில் உள்ளது போல் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. மக்கள் விழிப்புடன் செயல்படாவிட்டால் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சீனாவில் பரவ தொடங்கியகொரோனா தொற்றால் உலகில் இதுவரை 122,868,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,712,536 பேர் பலியாகி உள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து 99,024,163 பேர் இதுவரை மீண்டனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 21,131,456 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 30,423,853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 11,877,009 பேரும், இந்தியாவில் 11,554,895 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 4,437,938 பேரும், இங்கிலாந்தில் 4,285,684 பேரும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் அதிக பாதிப்பு உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் இருக்கிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 89,409 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் ஒரே நாளில் 64047 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3வது அதிகபாதிப்பு இந்தியாவில் தான் உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 40950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போலந்தில் 25,998 பேருக்கும், இத்தாலியில் 25,735 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 2,730 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,171 பேர் உயிரிழந்தனர். மெக்ஸிகோவில் 698 பேரும், ரஷ்யாவில் 443 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 189 பேர் பலியாகி உள்ளனர்.
உலகிலேயே கொரோனாவால் அதிகபட்சமாக அமெரிக்காவில் 554,007 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 290,525 பேரும், மெக்ஸிகோவில் 196,606 பேரும், இந்தியாவில் 159,594 பேரும், இங்கிலாந்தில் 126,026 பேரும் பலியாகி உள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications