டொனால்ட் டிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது கண்டன தீர்மானம்.. அடுத்து என்ன நடக்கும்?
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, செனட் கண்டன தீர்மான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே பதவியிலிருந்து முன்னாள் அதிபர் ஒருவர் மீது கண்டனத் தீர்மானம் நடைபெறுவது இதுதான் முதல் முறையாகும்.
தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து, அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, டொனால்ட் டிரம்ப் மீது பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அது நிறைவேறியது. டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை
அவர் அதிபராக பதவி வகித்த காலத்தில், இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜனவரி 20ம் தேதி ஜோ பைடன் பதவியேற்றார். இந்த தீர்மானம் 14ம் தேதி நிறைவேறியது. அமெரிக்க அதிபர் வரலாற்றில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோதுதான் முதல் முறையாக 2 முறை கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்ற கலவரம் தொடர்பாகவும் முன்னதாக உக்ரைன் தொடர்பான விவகாரத்திலும் என 2 முறை டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் வந்துள்ளது.

தேர்தலில் போட்டியிட முடியாது
இப்போது முன்னாள் அதிபர் ஆகிவிட்ட நிலையிலும் அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் செனட்டில் வந்துள்ளது. இது அமெரிக்காவில் முதல் முறையாகும். டொனால்ட் ட்ரம்ப் மீதான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அவர் 2024 ஆம் ஆண்டு மறுபடி அமெரிக்க தேர்தலில் போட்டியிட முடியாது. அரசு தொடர்பான எந்த பதவியிலும் இருக்க முடியாது. எனவே தான் இந்த தீர்மானம் உலகம் முழுக்க உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

செனட் உறுப்பினர்கள் பலம் எப்படி?
அமெரிக்க செனட் சபையில் 100 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 3 பங்கினர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக ஓட்டு போட்டால் கண்டனத் தீர்மானம் நிறைவேறும். ஜனநாயக கட்சியை சேர்ந்த 50 பேர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக இருக்கிறார்கள். இது தவிர டொனால்ட் ட்ரம்ப் கட்சியான ஜனநாயக கட்சியில் இருந்து 17 செனட் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்கு போட்டால் மட்டும் தான் இந்த தீர்மானம் நிறைவேறும். தற்போதைய நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. அதாவது டொனால்ட் டிரம்ப் தகுதிநீக்கப்பட வேண்டுமானால் 67 செனட் உறுப்பினர்களின் ஓட்டுக்கள் தேவைப்படுகிறது. ஆனால் குடியரசு கட்சியில் இருந்து அதிகபட்சமாக 6 உறுப்பினர்கள் மட்டும் தான் எதிராக ஓட்டு போடும் வாய்ப்பு இருக்கிறது.

செனட்டில் வாதம்
செனட் சபையில் முதல் நாள் வாதம் நேற்று துவங்கி விட்டது. இன்றும் இரு தரப்பு வாதமும் நடைபெறும். இரு தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற கலவரம் தொடர்பான விவாதம் மற்றும் பிரதிவாதம் முன்வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications