டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா! 22 மணி நேர பயணம்.. தரையிறங்குவது எங்கே?
வாஷிங்டன்: விண்வெளி மையத்துக்கு சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா இன்று மாலை பூமிக்கு புறப்பட்டுள்ளார். அவருடன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரும் பூமி திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
விண்வெளி மையத்திற்கு சென்றனர். உடன், அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

விண்வெளி மையத்திலிருந்து மாலை 4.35 மணிக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் புறப்பட்டனர். நாளை மதியம் 3 மணிக்கு பூமிக்கு வந்தடைவார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று மாலை 4.65 மணியளவில் சுபான்ஷு சுக்லா தலைமையிலான விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு புறப்பட்டுள்ளது. சுமார் 22 மணிநேர பயணத்திற்கு கலிபோர்னியாவில் தரையிறங்குகிறார்கள்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், கடந்த மாதம் 25 ஆம் தேதி விண்வெளி நிலையத்திற்கு 4 விண்வெளி வீரர்களும் சென்றனர். அதாவது, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உடன், அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
14 நாட்கள் தங்கியிருந்து 60 ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். அவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 7 சோதனைகள் அடங்கும். இதில் நுண்ணுயிரி பாசிகள், தசை இழப்பு மற்றும் விண்வெளியில் தாவர வளர்ச்சி ஆகியவை முக்கியமானவையாகும்.
இந்தநிலையில், சுபான்ஷூ சுக்லா உள்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் இன்று மாலை 4.40 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறிய 22 மணி நேரம் கழித்து பிற்பகல் 2.10 மணியளவில் பூமியில் கால் பதிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications