எப்ஸ்டீன் பைல்ஸ்: அடுத்தடுத்து சிக்கும் தலைகள்.. இங்கிலாந்து இளவரசரை தொடர்ந்து தூதரக அதிகாரி கைது
சென்னை: அமெரிக்காவில் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் பெரிதாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னர் மூன்றாம் சார்லசின் சகோதரருமான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் விண்ட்சர் கைதாகினார். இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சனும் கைதாகியுள்ளார்.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக ஜெப்ரின் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். பெரும் பணக்காரரான இவர் தனது தனித்தீவிற்கு பல்வேறு பிரபலங்களை அழைத்து சென்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகின.

மின்னஞ்சல்கள், வீடியோக்கள்
ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது மின்னஞ்சல் உரையாடல்கள் வெளியாகி அதிரவலையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், வீடியோக்கள் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னர் மூன்றாம் சார்லசின் சகோதரருமான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் விண்ட்சர் மீது குற்றசாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, இளவரசர் ஆண்ட்ரு கடந்த 19ஆம் தேதி கைதானார்.
இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சன்
அரசுப் பதவி துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டார். பிரிட்டன் வரலாற்றில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பிறகு, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை நிகழ்வாகும். இந்த நிலையில் அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சனும் எப்ஸ்டீன்ஸ் பைல் விவகாரத்தில் கைதாகியுள்ளார்.
பொது அலுவலகத்தில் சந்தேகத்திற்கிடமான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் லண்டன் போலீசார் அவரை கைது செய்தனர். இங்கிலாந்து அரசு அலுவல் மெயில்கள் மற்றும் முக்கியமான தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications