எப்ஸ்டீன் பைல்ஸ்: அடுத்தடுத்து சிக்கும் தலைகள்.. இங்கிலாந்து இளவரசரை தொடர்ந்து தூதரக அதிகாரி கைது
சென்னை: அமெரிக்காவில் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் பெரிதாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னர் மூன்றாம் சார்லசின் சகோதரருமான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் விண்ட்சர் கைதாகினார். இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சனும் கைதாகியுள்ளார்.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக ஜெப்ரின் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். பெரும் பணக்காரரான இவர் தனது தனித்தீவிற்கு பல்வேறு பிரபலங்களை அழைத்து சென்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகின.

மின்னஞ்சல்கள், வீடியோக்கள்
ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது மின்னஞ்சல் உரையாடல்கள் வெளியாகி அதிரவலையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், வீடியோக்கள் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னர் மூன்றாம் சார்லசின் சகோதரருமான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் விண்ட்சர் மீது குற்றசாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, இளவரசர் ஆண்ட்ரு கடந்த 19ஆம் தேதி கைதானார்.
இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சன்
அரசுப் பதவி துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டார். பிரிட்டன் வரலாற்றில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பிறகு, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை நிகழ்வாகும். இந்த நிலையில் அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சனும் எப்ஸ்டீன்ஸ் பைல் விவகாரத்தில் கைதாகியுள்ளார்.
பொது அலுவலகத்தில் சந்தேகத்திற்கிடமான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் லண்டன் போலீசார் அவரை கைது செய்தனர். இங்கிலாந்து அரசு அலுவல் மெயில்கள் மற்றும் முக்கியமான தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications