எப்ஸ்டீன் பைல்ஸ்: அடுத்தடுத்து சிக்கும் தலைகள்.. இங்கிலாந்து இளவரசரை தொடர்ந்து தூதரக அதிகாரி கைது
சென்னை: அமெரிக்காவில் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் பெரிதாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னர் மூன்றாம் சார்லசின் சகோதரருமான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் விண்ட்சர் கைதாகினார். இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சனும் கைதாகியுள்ளார்.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக ஜெப்ரின் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். பெரும் பணக்காரரான இவர் தனது தனித்தீவிற்கு பல்வேறு பிரபலங்களை அழைத்து சென்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகின.

மின்னஞ்சல்கள், வீடியோக்கள்
ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது மின்னஞ்சல் உரையாடல்கள் வெளியாகி அதிரவலையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், வீடியோக்கள் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னர் மூன்றாம் சார்லசின் சகோதரருமான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் விண்ட்சர் மீது குற்றசாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, இளவரசர் ஆண்ட்ரு கடந்த 19ஆம் தேதி கைதானார்.
இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சன்
அரசுப் பதவி துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டார். பிரிட்டன் வரலாற்றில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பிறகு, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை நிகழ்வாகும். இந்த நிலையில் அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சனும் எப்ஸ்டீன்ஸ் பைல் விவகாரத்தில் கைதாகியுள்ளார்.
பொது அலுவலகத்தில் சந்தேகத்திற்கிடமான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் லண்டன் போலீசார் அவரை கைது செய்தனர். இங்கிலாந்து அரசு அலுவல் மெயில்கள் மற்றும் முக்கியமான தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications