4 லட்சம் பெண்களை பலாத்காரம் செய்த பாக்., ராணுவம்.. ஐநாவில் வெளுத்துவிட்ட இந்தியா.. கலங்கிய பிரதிநிதி
வாஷிங்டன்:காஷ்மீரில் பல ஆண்டுகளாக பெண்கள் போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றனர். பாலியல் வன்முறைகளை தாங்கி கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக ஐநாவில் பொய்களை கட்டவிழ்த்து விட்ட பாகிஸ்தானுக்கு நம் நாடு சுளீர் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சர்ச்லைட் என்ற பெயரில் சொந்த நாட்டின் 4 லட்சம் பெண்களை பாகிஸ்தான் ராணுவம் பலாத்காரம் செய்ததாக இந்தியா கூறி பாகிஸ்தானின் பிரதிநிதியின் மூக்கை உடைத்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் சபை கூடியது. பெண்கள் பாதுகாப்பு பற்றி விவாதம் நடந்தது. வழக்கம்போல் பாகிஸ்தான் நம் நாட்டின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம் பேசுகையில், ‛‛காஷ்மீரில் பல ஆண்டுகளாக பெண்கள் போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றனர். பாலியல் சம்பவங்களுக்கு ஆளாகிறார்கள். மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைகளை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று ஆதாரமற்ற அதேவேளையில் நம் நாட்டை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்தார்.
இதற்கு நம் நாட்டின் பிரதிநிதி மரண அடி கொடுத்தார்.
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஸ் பாகிஸ்தானின் செயலை தோலுரித்து காட்டினார். இதுபற்றி பர்வதனேின ஹரிஸ் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு எதிராக குறிப்பாக பாகிஸ்தான் விரும்பும் எங்கள் நாட்டின் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக மாயையான கருத்துகளை கூறி வருகிறது. இது துரதிர்ஷ்டவசமானது.
பெண்களின் சுதந்திரம், பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. பெண்களுக்காக இந்தியா செய்த ஒவ்வொரு சாதனையும் கறை படியாதது. ஆனால் தனது சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசும் ஒரு நாடு, ஒவ்வொரு முறையும் இந்த சபையை தவறாக வழிநடத்துவதையே நோக்கமாக வைத்துள்ளது.
1971ம் ஆண்டில் ‛ஆபரேஷன் சர்ச்லைட்' மூலம் இதே பாகிஸ்தான் தான் சொந்த நாட்டில் இனபடுகொலையை நிகழ்த்தியது. 4 லட்சம் பெண்களை பாகிஸ்தான் ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்தது. பாகிஸ்தானின் ஒவ்வொரு செயலையும் இந்த உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது'' என்று கூறினார். இதை கேட்டு பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம் அமைதியானார்.
‛ஆபரேஷன் சர்ச்லைட்' என்பது வங்கதேசம் பிரிவினையின்போது நடந்த ஆபரேஷனாகும். வங்கதேசம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. 1971ல் வங்கதேசத்துக்கான தனி நாடு கோரி போராட்டம் வெடித்தது. வன்முறை உருவானது. அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் டிக்கா கான் என்பவர் ‛ஆபரேஷன் சர்ச்லைட்' என்ற பெயரில் வங்கமொழி பேசுவோருக்கு எதிராக அடக்குமுறையை ஏவினார்.
இதையடுத்து தனி நாடு கேட்டு போராடியவர்களை தேடி தேடி இனபடுகொலை செய்தது பாகிஸ்தான் ராணுவம். அப்பாவி பெண்கள் 4 லட்சம் பேரை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக இன்று வரை வங்கதேசம் சார்பில் கூறப்பட்டு வுருகிறது. அதன்பிறகு நம் நாட்டின் ராணுவம் களம் புகுந்தது. பாகிஸ்தான் வீரர்கள் நம்மிடம் சரணடைந்தனர். இதையடுத்து தான் வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது. இதனை தான் நம் நாட்டின் பிரதிநிதி குறிப்பிட்டு பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார்.
அதேபோல், சமீபத்தில்,கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசியது. இதில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 30 பேர் வரை இறந்தனர். இதனை தான் நம் நாட்டின் பிரதிநிதி சுட்டிக்காட்டி விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்











Click it and Unblock the Notifications