1 கிராமாவது உடனே வாங்குங்க! தங்கத்தை இனி நினைச்சு கூட பார்க்க முடியாது? ஏடாகூட வேலை பார்த்த ட்ரம்ப்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு உலக நாடுகளுக்கு எதிராக பதிலுக்கு பதில் வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார். இந்த நிலையில் உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராம் 88 ஆயிரத்து 790 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமல்படுத்திய வரிக் கொள்கைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் தான் என்கின்ற பொருளாதார வல்லுநர்கள். மேலும், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இப்போதே செய்து கொள்ள வேண்டும் எனவும் வரும் காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில் உலக அளவில் பொருளாதார ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

EU US Donald Trump

சீனா, மெக்ஸிகோ, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கும் அதே அளவு வரியை அவர்கள் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கும் விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இதற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர் வினையாற்றி வருகின்றனர்.

மேலும், ஐரோப்பிய யூனியன் அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒயின், ஷாம்பெய்ன் உள்ளிட்ட மது வகைகளுக்கு 200 சதவீத வரியை டொனால்ட் ட்ரம்ப் வித்திருக்கிறார். இதனால் பல்வேறு நாடுகள் பொருளாதார போரை எதிர்கொண்டுள்ளன. இது போன்ற உலக அளவில் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் போது பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருக்கிறது.

தற்போது டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கையால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதோடு மக்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அதிக அளவில் மக்களும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற நிலையில் 15-க்கும் மேற்பட்ட முறை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 10 கிராம் தங்கத்தின் விலை 88,790 ரூபாயாக இருந்தது. மும்பை எம்சிஎக்ஸ் சந்தையில் கோல்ட் ப்யூச்சர்ஸ் எனப்படும் தங்க ஒப்பந்தங்கள் 0.54 சதவீதம் உயர்ந்து 88 ஆயிரத்து 865 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக கூறியுள்ளது. இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3077.44 டாலராக அதிகரித்து இருக்கிறது.

அமெரிக்கா தனது வாணிப கொள்கைகளை கடுமையாக்கியுள்ளதால், பல நாடுகளும் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இதனால், உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர். மேலும், அமெரிக்கா தனது வாகன இறக்குமதிக்கு 25% வரி விதித்துள்ளதால், மற்ற நாடுகளும் தங்கள் வரிகளை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மொத்தமாக, 2025 தொடங்கி தங்கம் 15% மேல் விலை உயர்வு கண்டுள்ள நிஉலையில், சர்வதேச சந்தை நிபுணர்கள் தங்கத்தின் விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். தற்போது தங்கத்திற்கு 3,050 முதல் 3,110 டாலர் என்ற அளவில் நிலைத் தன்மை உள்ளது. இந்திய சந்தையில் 88,270 முதல் 88,990 வரை விலை உள்ளதால், இன்னும் சில நாட்களில் புதிய உச்சத்தை எட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 34.40 டாலர் என்ற அளவிலும், இந்திய சந்தையில் 1,02,950 ரூபார் என்ற அளவில் உள்ளது. மொத்தத்தில், தங்கத்தின் விலை உயர்வது முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக இருக்கலாம் எனவும், ஆனால் பொதுமக்கள் மற்றும் நகைக்கடைகளுக்கு இது ஒரு சவாலாக மாறும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+