Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுந்தர் பிச்சை சென்னை வீடு விற்பனை.. கலங்கி நின்ற கூகுள் சிஇஓ தந்தை.. வாங்கியது தமிழ் சினிமா நடிகர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்த சென்னை வீடு இப்போது விற்கப்பட்டுள்ளது. அதை வாங்கியது யார் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நவீன உலகில் எல்லாமே இணைய வசம் என்றே இருக்கிறது. இப்போது A டீ Z வரை அனைத்துமே இணைய வசம் சென்று கொண்டிருக்கிறது. ஷாப்பிங்க முதல் டேட்டிங் எல்லாமே இணையத்தில் செய்ய முடிகிறது.

இதனால் டெக் நிறுவனங்களின் கையே ஓங்கி வருகிறது. தற்போதைய சூழலில் கூகுள், பேஸ்புக், ஆப்பிள் போன்ற டெக் நிறுவனங்கள் தான் உலகளவில் அதிக வருவாயை ஈட்டும் டாப் நிறுவனங்களாக இருக்கிறது..

 Google CEOs Dad Breaks Down as he sold Sundar Pichais Chennai Home to Kollywood Actor

சுந்தர் பிச்சை: அப்படி டாப் டெக் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆக இப்போது இருப்பவர் சுந்தர் பிச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சுந்தர் பிச்சை சென்னையில் தான் பள்ளிப் படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து கரக்பூர் ஐஐடி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பையும் அவர் முடித்தார். அவர் முதலில் 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.

கூகிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சாப்ட்வேர் பிரிவில் அவர் பணியாற்றினார். தொடர்ந்து பல ஆண்டுகள் அங்கே வேலை செய்த அவர், பல்வேறு பொறுப்புகளை வகித்து கூகுள் சிஇஓ பதவிக்கு உயர்ந்துள்ளார். இதனிடையே சென்னையின் அசோக் நகரிலுள்ள கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் பரம்பரை வீடு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆச்சரியம்: தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் அந்த நபர், சென்னையின் அசோக் நகரின் அந்துள்ள சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கியதாகக் கூறப்படுகிறது. நடிகர்-தயாரிப்பாளரான மணிகண்டன் இந்த வீட்டை வாங்கியதாக ஹிந்து பிசினஸில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சுந்தர் பிச்சையின் பெற்றோரின் தன்னிடம் நடந்து கொண்ட விதம் ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "சுந்தர் பிச்சையின் தாயார் அவரே ஃபில்டர் காபி போட்டுத் தந்தார். அவருடைய அப்பா முதல் சந்திப்பிலேயே தேவையான ஆவணங்களை வழங்கினார். அவர்களின் இந்த அணுகுமுறை எனக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

காத்திருந்தார்: எந்த இடத்திலும் சுந்தர் பிச்சையின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அவரது தந்தை உறுதியாக இருந்தார். இதனால் அவரது தந்தை பதிவு அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தார்.. ஆவணங்களை என்னிடம் ஒப்படைப்பதற்கு முன்பு தேவையான அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தினார்" என்றார்.

மணிகண்டன் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்றும், அவர் தனது செல்லப்பாஸ் பில்டர்ஸ் நிறுவனம் மூலம் சென்னையில் சுமார் 300 வீடுகளைக் கட்டி டெலிவரி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 Google CEOs Dad Breaks Down as he sold Sundar Pichais Chennai Home to Kollywood Actor

சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த வீடு தான் என்பது தெரிந்த உடன் அசோக் நகரில் அமைந்துள்ள அந்த வீட்டை வாங்கியே தீர வேண்டும் என்று மணிகண்டன் முடிவு செய்துவிட்டாராம். சென்னையில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை, 1989 ஆம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் படிக்கச் சென்னையை விட்டு வெளியேறினார். "சுந்தர் பிச்சை நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார், அவர் வாழ்ந்த வீட்டை வாங்குவது என் வாழ்வின் பெருமைக்குரிய சாதனையாக இருக்கும்" என்று மணிகண்டன் தெரிவித்தார்.

கலங்கிய தந்தை: அந்த வீட்டை அவரது தந்தையே அவரது சொந்த செலவில் முழுமையாக இடித்து, அந்த இடத்தில் வீடுகளைக் கட்ட மணிகண்டனிடம் ஒப்படைத்துள்ளார். இதுதான் சுந்தர் பிச்சையின் தந்தை முதலில் வாங்கிய சொத்தாம். இதனால், அந்த ஆவணங்களை ஒப்படைக்கும் போது சில நிமிடங்கள் அவர் உடைந்துவிட்டாராம்.

இந்த இடத்தில் மணிகண்டன் வில்லா கட்ட உள்ளார், அதற்கான கட்டுமான பணிகள் மூன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+