விண்வெளியில் மாதவிடாயை வீராங்கனைகள் சமாளிப்பது எப்படி.. ரத்தம் பின்னோக்கி பாயுமா.. அறிவியல் விளக்கம்
வாஷிங்டன்: இப்போது விண்வெளிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்கள் இதுபோல விண்வெளிக்குச் செல்லும் போது அந்த நேரத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அதை எப்படிச் சமாளிப்பார்கள். இதற்கான நடைமுறை என்ன என்பது குறித்து பலருக்கும் கேள்வி இருக்கும். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும் போது அந்த 4, 5 நாட்களைச் சமாளிப்பதே சவாலான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு உடல் ரீதியாக மட்டுமின்றி.. மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்டவை கூட ஏற்படும்.

மாதவிடாய்: பூமியில் மாதவிடாய் ஏற்படும் போதே இந்த பிரச்சினை என்றால் விண்வெளியில் மாதவிடாய் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? இப்போது விண்வெளிக்குப் பெண்கள் செல்வது அதிகரித்து வரும் நிலையில், இந்த கேள்வி பொருத்தமாக இருக்கிறது. பல சர்வதேச நாடுகள் பெண்களை விண்வெளிக்கு அனுப்பி வரும் நிலையில், மாதவிடாய் காலத்தில் அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
விண்வெளியில் பெண்கள்: அதற்கு முன்பு ஒரு சின்ன வரலாறு.. அப்போதைய சோவியத் யூனியனை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான வாலண்டினா தெரேஷ்கோவா என்பவர் தான் முதலில் விண்வெளிக்குச் சென்று பெண் ஆவார். கடந்த 1963ஆம் ஆண்டு அவர் விண்வெளிக்குச் சென்றார். அதன் பிறகு பல பெண்கள் விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ள நிலையில், இப்போது விண்வெளிக்கு அந்த எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது.
பெண்கள் விண்வெளிக்குச் செல்லும் போது மாதவிடாய் ஏற்பட்டால் அதை எப்படிக் கையாள்வார்கள் என்ற கேள்வி பலரும் எழும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மாதவிடாயை ஒரு காரணமாகச் சொல்லியே பல ஆண்டுகள் பெண்கள் விண்வெளிக்குச் செல்வதைப் பல உலக நாடுகள் மறுத்தன. பெண்கள் பலரும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தாலும் உலக நாடுகள் பெண்களை அனுமதிக்கவே இல்லை. 1960கள் வரை இதே நிலை தான் தொடர்ந்தது.
அதன் பிறகே பெண்கள் விண்வெளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னரே விண்வெளி பயணங்களின் போது தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சானிட்டரி நாப்கின்களை நாசா சேர்த்தது.. சரி அடுத்த கேள்வி மாதவிடாய் ஏற்படும் போது அது பூமியில் ஏற்படுவதைப் போல இருக்குமா என்பது..
வழக்கம் போலவே இருக்கும்: பூமியில் ஏற்படுவதைப் போலவே விண்வெளியிலும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அங்கு என்ன தான் புவி ஈர்ப்பு விசை இல்லை என்ற போதிலும் மாதவிடாய் ரத்தமானது வழக்கம் போலவே வெளியேறும். நமது உடல் அங்கேயும் வழக்கம் போலவே இயங்கும். அவை ஃபலோபியன் குழாய்கள் வழியாக மீண்டும் பின்னோக்கி உடலுக்குள் இழுத்துக் கொள்ளப்படாது. மேலும், இதுவரை விண்வெளிக்குச் சென்ற பெண்கள் யாருமே புவி ஈர்ப்பு விசை இல்லாததால் மாதவிடாய் பிரச்சனைகளை எதிர்கொண்டதாகக் கூறியதில்லை. அங்குப் பூமியில் மாதவிடாய் ஏற்படுவது போலவே ஏற்படும் என்றே அவர்கள் தெரிவித்தனர்.
"பூமியை நோக்கி வரும் சிறுகோள்.." சரியாக இந்த நாளில் தான் மோத போகுது.. நம்மால் தடுக்கவே முடியாதாம்
அதேநேரம் விண்வெளி சென்ற பல பெண்கள் மாத்திரை மூலம் மாதவிடாயைத் தள்ளிப் போட்டுக் கொள்வார்களாம். கட்டாயம் இப்படிச் செய்ய வேண்டும் என்ற விதி இல்லை என்ற போதிலும் பெரும்பாலான பெண்கள் இதையே தேர்வு செய்வார்களாம். இதற்கும் சில காரணங்கள் இருக்கிறது.
பெண்கள்: அதாவது சர்வதேச விண்வெளி நிலையம் மனித ரத்தத்தைக் கையாளும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மன ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், சுகாதாரம் உள்ளிட்டவை சிக்கலாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே விதி இல்லை என்ற போதிலும் பெரும்பாலான பெண்கள் விண்வெளிக்குச் செல்லும் போது மாத்திரை எடுத்துக் கொண்டு மாதவிடாய் காலத்தைத் தள்ளிப் போட்டுக் கொள்வார்களாம்.












Click it and Unblock the Notifications