தாய்லாந்து - கம்போடியா சண்டை நிறுத்தம்? பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்லிட்டாங்க! ஒரே போடாக போட்ட டிரம்ப்
வாஷிங்டன்: தாய்லாந்தும் கம்போடியாவும் அமைதியை எதிர்பார்க்கின்றன என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருநாடுகளும் சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் பதற்றம் விரைவில் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் 817 கிலோ மீட்டர் தொலைவிற்கு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நிலையில், இருநாட்டின் எல்லையில் உள்ள புராதன கோயிலுக்கு இருநாடுகளும் உரிமை கோரி வருகின்றன.

தாய்லாந்து கம்போடியா மோதல்
அதாவது, இந்த இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தம் கொண்டாடுவதில்தான் பிரச்சினையானது நீடிக்கிறது. கடந்த 1959 ஆம் ஆண்டில் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றன. இதில், கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வந்தது. ஆனால் இதனை ஏற்க மறுக்கும் தாய்லாந்து, தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.
இந்த பிரச்சினை காரணமாக கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், கடந்த 25 ஆம் தேதி இருநாடுகளுக்கும் இடையே மோதல் பகிரங்கமாக வெடித்தது. தா முயென் தாம் கோயில் வளாகத்தில் கம்போடிய ராணுவத்தின் ட்ரோன்கள் பறந்ததாகவும், அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் கோயிலை நோக்கி முன்னேறியதாகவும் சொல்லப்படுகிறது.
பதற்றத்தை தணிக்க டிரம்ப் பேச்சுவார்த்தை
இதையடுத்து, தாய்லாந்து, கம்போடிய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தாய்லாந்து தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கம்போடியாவில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இருநாடுகளும் கூறியுள்ளனன. தாய்லாந்து சட்ட விரோதமாக ராணுவ அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், இதனை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் கம்போடியா கூறி வருகிறது.
தாய்லாந்து எல்லையோரத்தில் உள்ள 8 இடங்களில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தியது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் தலையிட்டு பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம்
தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர் நிறுத்தத்தை எதிர்பார்க்கின்றன. நான் கம்போடியா பிரதமருடன் பேசினேன். தாய்லாந்து ஆக்டிங் பிரதமருடன் பேசியது தொடர்பாக அவரிடம் விவரித்தேன். அமெரிக்காவுடன் இருநாடுகளும் வர்த்தக உறவை கொண்டுள்ளன.
சண்டையை முடிவுக்கு கொண்டு வராமல் இருநாடுகளுடன் வர்த்தக பேச்சை தொடர்வது சரியாக இருக்காது என அமெரிக்கா கருதுகிறது. தற்போது இருநாடுகளும் சண்டை நிறுத்தம் தொடர்பாக உடனடியாக பேசுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. அனைத்து சரியாக சென்றால் அமைதி ஏற்பட்டு விடும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஈரானின் எரிபொருள் இதயத்திலேயே கை வைத்த டிரம்ப்.. கார்க் தீவிலேய களம் இறங்கிய அமெரிக்கா -
Kharg Island: ஈரானின் ”மணிமகுடம்” அடிமடியிலேயே கைவைத்த அமெரிக்கா.. கார்க் தீவில் அப்படி என்னதான் இருக்கிறது? -
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்.. சீனாவுக்கு சிக்னல் கொடுத்த டிரம்ப்.. பதற்றத்தில் ஈரான் -
அடங்காத கிம் ஜாங் உன்.. 10 ஏவுகணைகளை ஏவி அமெரிக்காவை வம்பிழுக்கும் வடகொரியா! பெரும் பதற்றம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications