தாய்லாந்து - கம்போடியா சண்டை நிறுத்தம்? பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்லிட்டாங்க! ஒரே போடாக போட்ட டிரம்ப்
வாஷிங்டன்: தாய்லாந்தும் கம்போடியாவும் அமைதியை எதிர்பார்க்கின்றன என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருநாடுகளும் சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் பதற்றம் விரைவில் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் 817 கிலோ மீட்டர் தொலைவிற்கு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நிலையில், இருநாட்டின் எல்லையில் உள்ள புராதன கோயிலுக்கு இருநாடுகளும் உரிமை கோரி வருகின்றன.

தாய்லாந்து கம்போடியா மோதல்
அதாவது, இந்த இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தம் கொண்டாடுவதில்தான் பிரச்சினையானது நீடிக்கிறது. கடந்த 1959 ஆம் ஆண்டில் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றன. இதில், கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வந்தது. ஆனால் இதனை ஏற்க மறுக்கும் தாய்லாந்து, தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.
இந்த பிரச்சினை காரணமாக கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், கடந்த 25 ஆம் தேதி இருநாடுகளுக்கும் இடையே மோதல் பகிரங்கமாக வெடித்தது. தா முயென் தாம் கோயில் வளாகத்தில் கம்போடிய ராணுவத்தின் ட்ரோன்கள் பறந்ததாகவும், அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் கோயிலை நோக்கி முன்னேறியதாகவும் சொல்லப்படுகிறது.
பதற்றத்தை தணிக்க டிரம்ப் பேச்சுவார்த்தை
இதையடுத்து, தாய்லாந்து, கம்போடிய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தாய்லாந்து தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கம்போடியாவில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இருநாடுகளும் கூறியுள்ளனன. தாய்லாந்து சட்ட விரோதமாக ராணுவ அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், இதனை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் கம்போடியா கூறி வருகிறது.
தாய்லாந்து எல்லையோரத்தில் உள்ள 8 இடங்களில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தியது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் தலையிட்டு பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம்
தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர் நிறுத்தத்தை எதிர்பார்க்கின்றன. நான் கம்போடியா பிரதமருடன் பேசினேன். தாய்லாந்து ஆக்டிங் பிரதமருடன் பேசியது தொடர்பாக அவரிடம் விவரித்தேன். அமெரிக்காவுடன் இருநாடுகளும் வர்த்தக உறவை கொண்டுள்ளன.
சண்டையை முடிவுக்கு கொண்டு வராமல் இருநாடுகளுடன் வர்த்தக பேச்சை தொடர்வது சரியாக இருக்காது என அமெரிக்கா கருதுகிறது. தற்போது இருநாடுகளும் சண்டை நிறுத்தம் தொடர்பாக உடனடியாக பேசுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. அனைத்து சரியாக சென்றால் அமைதி ஏற்பட்டு விடும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான்












Click it and Unblock the Notifications