அமெரிக்காவில் பயங்கரம்.. பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி - 8 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ரோட்தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் ரோட் தீவில் பிரவுன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.இந்த பல்கலைக்கழகத்தில் 7,300 பேர் இளநிலை படிப்பையும், 3 ஆயிரம் பேர் பட்ட மேற்படிப்பையும் படித்து வருகின்றனர்.
தற்போது பல்கலைக்கழகத்தின் இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது. மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த வேளையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கருப்பு நிற உடையில் நுழைந்த நபர் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். கண்மூடித்தனமாக அவர் துப்பாக்கியால் சுட்டார். அதன்பிறகு அந்த நபர் வேகமாக வெளியேறிவிட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்? பின்னணி என்ன? என்பது பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுபற்றி மாகாண மேயர் பிரிட் ஸ்மெல்லி கூறுகையில், ‛‛இது துரதிர்ஷ்வசமானது. பிராவிடன்ஸ் நகரமும், ரோட் தீவின் மாகாணத்திலும் ஒருபோதும் நிகழக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது. பிற இடங்களில் நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம். இப்போது இங்கும் நடந்து விட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்ய நாங்கள் அனைத்து பலத்தையும் பயன்படுத்துவோம்'' என்றார்.
அமெரிக்காவில் தொடர்ந்து அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி, நைட் கிளப் உள்பட அனைத்து பொது இடங்களிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் அதிகப்படியான துப்பாக்கிகள் தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
-
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications