ஒரு பயணிக்காக விமானத்திற்குள் நடந்த வாக்கெடுப்பு.. கையை தூக்கி பங்கேற்ற பயணிகள்.. காரணம் இதுதான்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பயணி ஒருவர் விமானத்தில் ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த பயணியை வெளியேற்றுவதற்காக விமான பயணிகள் கையாண்ட விதம் கவனம் பெறுவதாக அமைந்துள்ளது.
சமீப காலமாக விமானத்திற்குள் பயணிகள் வரம்பு மீறி செயல்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருக்கும் போது சக பயணிகளுடன் சண்டையிடுவது..சிப்பந்திகளுடன் வாக்குவாதம் செய்வது, எமெர்ஜென்சி டோரை திறக்க முயற்சிப்பது, காக்பிட் அறைக்குள் செல்ல முற்படுவது விமான பயணிகளின் அத்துமீறல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல சில சமயங்களில் விமான சிப்பந்திகள் மீதும் புகார்கள் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாகவே விமான பயணத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகி வரும் நிலையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பயணி ஒருவர் விமானத்தில் ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த பயணியை விமான பயணிகள் அனைவரும் சேர்ந்து வெளியேற்றி இருக்கிறார்கள்.
அதற்காக பயணிகள் கையாண்ட விதம் கவனம் பெறுவதாக அமைந்துள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்:- அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து அட்லாண்டாவிற்க்கு விமானம் ஒன்று புறப்பட தயராக இருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் தங்களுக்கு ஒதுக்க்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து பயணத்திற்கு தயாராகி கொண்டு இருந்தனர். அப்போது ஒரு பெண் பயணி மட்டும் சீட் மாற்றக் கோரி ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அந்த பெண் பயணியின் செயல் பிற பயணிகளுக்கும் இடையூறாக தெரிந்தது. அந்த பெண் பயணியின் நடவடிக்கையால் கோபம் அடைந்த பிற பயணிகள் அவரை வெளியேற்ற முடிவு செய்தனர். இதற்காக விமான பயணிகளின் முடிவு கேட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதாவது, ரகளையில் ஈடுபட்ட அந்த பெண் பயணியை வெளியேற்ற விரும்ப வேண்டும் என நினைக்கிறவர்கள் கைகளை தூக்கி தங்கள் சம்மதத்தை தெரிவிக்குமாறு பயணி ஒருவர் கேட்கிறார்.
அதன்பிறகு பயணியை வெளியே அனுப்ப உடன்படும் பயணிகளும் கைகளை தூக்கி ஆதரவை தெரிவிக்கின்றன. அதன்பிறகு பயணியை வெளியே அனுப்பிய பிறகு விமானம் புறப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணியை வெளியேற்றும் விவகாரத்தில் கூட ஜனநாயகத்தை கடைபிடித்து இருக்கிறார்களே என நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications