Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிக்கு 27,000 கி.மீ வேகத்தில் பூமிக்குள் நுழையும் சுபான்ஷு சுக்லா! எப்போது தரையிறங்குகிறார்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா கடந்த மாதம் இறுதியில் விண்வெளிக்குச் சென்றார். இரண்டு வாரங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கிய சுபான்ஷு சுக்லா அங்குப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். இதற்கிடையே இன்றைய தினம் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மீண்டும் பூமி திரும்புகிறார். இதற்கான பயணம் தற்போது தொடங்கியுள்ளது.

இஸ்ரோ அமைப்பானது விண்வெளி துறையில் தொடர்ச்சியாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் மிகவும் வெற்றிகரமான விண்வெளி ஆய்வு நிறுவனமாக இஸ்ரோ இருந்து வருகிறது. குறைந்த செலவில் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் விண்வெளி ஆய்வுகளை இஸ்ரோ செய்து வருகிறது. அதற்குச் சந்திரயான் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

ISRO space nasa

சுபான்ஷு சுக்லா

இதற்கிடையே அடுத்த கட்டமாக இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. ககன்யான் என்ற இந்தத் திட்டத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதற்காக 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியும் பெற்று வருகிறார்கள். அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் சுபான்ஷு சுக்லா.

ககன்யான் திட்டத்திற்கு முன்பாகவே நாசா உதவியுடன் சுபான்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் அனுபவம் ககன்யான் திட்டத்திற்கு உதவும் என்பதால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பயிற்சி, நாசாவுக்கான கட்டணம் என இஸ்ரோ இதற்குச் சுமார் ரூ.500 கோடி வரை செலவிட்டுள்ளது.

தீவிரப் பயிற்சி

இதற்காக சுக்லா கடந்த சில மாதங்களாகவே தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டார். பயிற்சி எல்லாம் முடிந்த பிறகு கடந்த கடந்த மாதம் ஜூன் 25ம் தேதி விண்வெளிப் பயணத்தைத் தொடங்கிய சுபான்ஷு சுக்லா 24 மணி நேரம் பயணித்து மறுநாள் அதாவது ஜூன் 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார். கடந்த இரு இரண்டு வாரங்களாக விண்வெளி நிலையத்தில் இருந்த அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.

பூமி திரும்புகிறார்

இந்தியரான ரகேஷ் சர்மாவுக்கு பிறகு விண்வெளி சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை சுபான்ஷு சுக்லா பெற்றார். மேலும், சர்வதேச சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். இரு வார ஆய்வுகள் முடிந்த நிலையில், சுபான்ஷு சுக்லா இன்று மீண்டும் பூமி திரும்புகிறார்.

எப்போது திரும்புகிறார்

இன்று மாலை சுபான்ஷு சுக்லா 3 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டிருக்கிறார். இன்று மாலை 4.30 மணியளவுக்கு அவர்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளார்கள். சுமார் 23 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு நாளை மாலை 3 மணியளவில் அவர்களின் விண்கலம் பூமியை அடையும்.

அமெரிக்காவின் கலிபோர்னியா கடலில் அவர்களின் விண்கலன் தரையிறங்கும். அந்த விண்கலன் தரையிறங்கிய உடனே அவர்களை மீட்கவும் குழு தயாராக இருக்கிறது. சுமார் இரு வாரங்கள் அவர்கள் விண்வெளியில் இருந்துவிட்டு திரும்புவதால் அவர்களின் உடலில் சில பல மாற்றங்கள் நடந்திருக்கும். இதனால் சில நாட்கள் வரை அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+