சென்னை ஐஐடி மாணவர் அமெரிக்காவில் மாயம்.. 6 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு.. திக்திக் சம்பவம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ஐஐடியில் படித்த மாணவர் சுமார் 6 நாட்களுக்கு முன்பு மாயமாகி இருந்த நிலையில், அவரது சடலம் இப்போது மீட்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன நடந்தது.. உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக உள்ளூர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்காகச் செல்கிறார்கள். பெரும்பாலும் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள். இருப்பினும், அதையும் தாண்டி ஓரிரு முறை மிக மோசமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

இந்திய மாணவர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மாயமான 22 வயது இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மாயமாகி சுமார் 6 நாட்கள் ஆன நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் மற்றும் பயோ மாலிக்குலார் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டப்படிப்பு மேற்கொண்டிருந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த பிப்ரவரி 9ம் தேதி இவர் திடீரெனக் காணாமல் போனார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்தச் சூழலில் தான் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம்
இதை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. உள்ளூர் போலீசார் அவரது உடலைக் கண்டுபிடித்ததாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.. மேலும், அவரது உடலை இந்தியாவுக்கு விரைந்து கொண்டுவரத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்துள்ளது.
இது குறித்து இந்தியத் தூதரகம் மேலும், "இந்த மிகவும் கடுமையான சோதனையான நேரத்தில், அவரது குடும்பத்திற்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை விரைந்து இந்தியாவுக்கு எடுத்து வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். அவரது குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது!
சகேத் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடைசியாகக் காணப்பட்டார். அவர் காணாமல் போன தகவலையடுத்து, லேக் அன்சா மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது. அப்போது அவரது பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பை, டில்டன் பிராந்திய பூங்காவின் அருகே உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
சகேத்தை கண்டுபிடிக்கச் சமூக வலைத்தளங்களிலும் உதவிகள் வந்தன. ரெடிட் தளத்திலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.. இந்தச் சூழலில் தான் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்
சகோத் சென்னை ஐஐடியில் தனது இளங்கலை படிப்பை முடித்திருக்கிறார். அவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரில் உள்ள ஸ்ரீ வாணி கல்வி மையத்தில் முடித்தவர். கல்லூரியில் மிகச் சிறந்த மாணவராகவே இருந்துள்ளார். அது மட்டுமின்றி, "ஹைப்பர்லூப்பிற்கான மைக்ரோசேனல் கூலிங் சிஸ்டம் மற்றும் அதற்கான முறை" என்ற கண்டுபிடிப்புக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார். கூர்மையான புத்திசாலித்தனம், பணிவைக் கொண்டவராக இவர் அறியப்படுகிறார்.
முன்னதாக வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மஜ்லீஸ் கட்சியின் எம்பி அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம், "இந்தியத் தூதரகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. எதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications