George Floyd: பற்றி எரியட்டும்.. ஹோட்டல்களுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் மீது கோபப்படாத ஓனர்!
வாஷிங்டன்: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நியாயம் கேட்டு போராடி வரும் போராட்டக்காரர்கள் இந்திய ரெஸ்டாரன்ட்டுக்கு தீ வைத்த போது அதன் உரிமையாளர் அவர்கள் மீது கோபம் கொள்ளாமல் ஜார்ஜுக்கு நியாயம் வேண்டும் என கோரியுள்ளார்.
Recommended Video
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டார். அப்போது விசாரணை அதிகாரி, அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார்.

கொலை
இதில் ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். போலீஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னபொலிஸ் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அதிலும் மினசோட்டா, ஜார்ஜியா, ஓகியோ, கென்டக்கி, டெக்சாஸ், கொலம்பியா ஆகிய இடங்களில் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

ரெஸ்டாரன்ட்
மின்னபொலிஸில் உள்ளது காந்தி மகால் என்ற ரெஸ்டாரன்ட். இது வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. இந்த ரெஸ்டாரன்ட்டுக்கு போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை தீ வைத்தனர். அப்போது அதன் உரிமையாளர்களுக்கு அவர்கள் மீது கோபமோ ஆத்திரமோ ஏற்படவில்லை. மாறாக ஹோட்டல்தானே பற்றி எரியட்டும். ஜார்ஜுக்கு நியாயம் வேண்டும் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டக்காரர்
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளரின் மகள் ஹஃப்சா தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களது காந்தி மகால் பற்றி எரிந்திருக்கலாம். ஆனால் எங்கள் இன மக்களுக்கு ஆதரவாகவும் பாதுகாக்கவும் உதவும் எங்கள் மனதில் உள்ள தீப்பிழம்புகள் ஒரு நாளும் அணைக்க முடியாது என தெரிவித்துள்ளார். அது போல் அவரது தந்தை ரூகெல் ஹோட்டல் பற்றி எரிந்தது கவலை அளிக்கிறதுதான், ஆனால் நாங்கள் போராட்டக்காரர்களுடன் இணைந்து நிற்கிறோம்.

ஜார்ஜ் கொலை
எங்கள் கட்டடம் எரியட்டும், ஜார்ஜ் கொலைக்கு நீதி வேண்டும். அவரை கொலை செய்த அதிகாரிகள் சிறையில் தள்ள வேண்டும். எங்களை பற்றி கவலை வேண்டாம், நாங்கள் மீண்டும் கட்டிக் கொள்வோம், ஹோட்டல் இழப்பிலிருந்து மீண்டும் வருவோம். ஹோட்டல் எரிந்தாலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications