அமெரிக்க அதிபர் தேர்தல் ரிசல்ட் என்னவாகும்? மாற்றங்கள் வருமா.. உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்
வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் முடிவுகளை உலக நாடுகள் பலவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் அதிபராக போவது டொனால்ட் ட்ரம்ப்பா அல்லது ஜோ பிடன் அந்த பதவிக்கு வருவாரா என்பதில், உலகின் பல நாடுகளுக்கு அக்கறை இருக்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி வகித்த போது, வெளியுறவுக் கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து கூட அமெரிக்காவை விலகச் செய்தார்.
எனவேதான் ஈரான் முதல் கியூபா வரை, சீனா முதல் இஸ்ரேல் வரை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எதிர்பார்ப்பு
சில நாடுகளுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ததாக அமெரிக்கா அறிவித்தது ட்ரம்ப் காலத்தில் சகஜமானது. ஈரானுடான அணு ஒப்பந்தம், பொருளாதார தடை என ட்ரம்ப் பல அதிரடிகளைச் செய்தார். அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகளின் ஸ்டேட்டஸ்களில் மாற்றங்களை கொண்டு வந்தார். அரபு நாடுகள் சிலவற்றை இஸ்ரேலுடன் கை குலுக்க வைப்பதில் வெற்றி பெற்றார். எனவேதான் அத்தனை நாடுகளும் அமெரிக்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள்
அமெரிக்கர்களுக்குத்தான் முதல் உரிமை என்று டொனால்டு டிரம்ப் முன் வைக்கும் கோஷத்தை, சர்வதேச நாடுகள், விமர்சனம் செய்து வரும்போதிலும் கொரோனா வைரஸ் நோய் பரவல் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் மெத்தனமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள போதிலும், ஜோ பிடன் வந்தால் நிலைமை மாறுமா என்பது கேள்விக்குறிதான்.

அமெரிக்கர்களுக்கு முதல் உரிமை
பராக் ஒபாமா அதிபராக பதவி வகித்த போது துணை அதிபராக பதவி வகித்தவர் தான் ஜோ பிடன். அப்போதும் அமெரிக்க நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் எதுவும் கிடையாது. அமெரிக்கர்களுக்கு முதல் உரிமை தரப்பட்டது. இந்தியாவை பொருத்தளவில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பிடன் எடுப்பாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

ஈரானுடன் மோதல்
2020ம் ஆண்டு துவக்கத்தில், அதாவது கொரோனா நோய்த்தொற்று துவங்குவதற்கு முன்பான காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்படுமா என்பது தான் சர்வதேச அளவில் பெரிதாக பேசப்பட்டு வந்தது. எனவே டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்றால் மறுபடியும் ஈரானுடனான மோதல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு கணக்கு இருப்பதால் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications