Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் வெளியிட்ட கண்டிஷன் எல்லாம் டம்மி.. நாங்க வச்சிருக்க பிளானே வேற.. பரபரப்பை கிளப்பும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் வெளியிட்ட 10 அம்ச திட்டங்கள் என்று ஊடகங்களில் வெளியாகும் ஆவணமும் நாங்கள் போர் நிறுத்த்திற்கு சம்மதம் தெரிவித்து ஏற்றுக்கொண்ட செயல்பாட்டு வடிவமைப்பும் ஒரே மாதிரியானவை அல்ல என்று அமெரிக்கா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை நடைமுறைக்கு மதிப்பளிக்கும் வகையில் அது பற்றி பொதுவெளியில் பேச மாட்டோம் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி கூறியுள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 28 ஆம் தேதி போர் வெடித்தது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுவதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

Iran 10 point plan and conditions we are discussing are not the same US Official

இறுதி கெடு விதித்த டிரம்ப்

இதையடுத்து, ஈரானும் கடும் கோபத்துடன் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்க தொடங்கியது. ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் வளைகுடா நாடுகளிலும் நெருக்கடி அதிகரித்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளும் திவீர முயற்சியில் ஈடுபட்டன.

ஆனால் உடனடியாக எந்த பலனும் கிடைக்கவில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், ஈரானுக்கு டிரம்ப் இறுதி கெடு விதித்தார். நாங்கள் முன்வைத்த 15 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இல்லையென்றால் ஈரானை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடுவேன் என்று எச்சரித்தார்.

தற்காலிக போர் நிறுத்தம்

அதாவது, ஈரான் பேரழிவை சந்திக்கும் எனவும் அந்த நாட்டின் மின்கட்டமைப்புகள், பாலங்கள் இரவோடு இரவாக தகர்த்து எறியப்படும் எனவும் நரகத்தின் வாயில் ஈரானுக்கு திறக்க வேண்டும் என கடுமையாக எச்சரித்தார். ஹார்முஸ் ஜலசந்தியையும் உடனே திறக்க வேண்டும் என்று கெடு விதித்து இருந்தார். டிரம்ப் விதித்த கெடு முடிவடைய சில மணி நேரமே இருந்த நிலையில், பாகிஸ்தான் மத்தியஸ்தில் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

வெள்ளை மாளிகை அதிகாரி விளக்கம்

போர் நிறுத்தம் செய்ய 10 நிபந்தனகைளையும் ஈரான் விதித்து இருந்தது. ஈராக், லெபனான், ஏமன் மீதான போரை முழுவதுமாக நிறுத்த வேண்டும். ஈரான் மீதான தாக்குதலை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து நெறிமுறைகளை நிறுவ வேண்டும்.

ஈரானை மறு கட்டமைப்பதற்கான செலவு தொகையை வழங்க வேண்டும். ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட 10 நிபந்தனைகள் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களில் ஈரான் வெளியிட்ட நிபந்தனைகள் தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் நீடிக்குமா?

அதாவது, ஈரானால் வெளியிட்ட 10 அம்ச திட்டமும் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதற்காக ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளும் ஒன்று அல்ல. ஊடகங்களில் பரவி வரும் ஆவணமும் நாங்கள் செயல்படுத்தி வரும் வரைவு பணித்திட்டமும் ஒன்று அல்ல என்று பெயர் வெளியிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக மேற்கொண்டு பேச மறுத்த அவர், அந்த நடைமுறையின் மதிப்பு கருதி அதை பொதுவெளியில் பேசப்போவது இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் கடும் கோபம் அடைந்துள்ள ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவும் இப்படி மாற்றி மாற்றி பேசி வருவது போர் நிறுத்தம் நீடிக்குமா? என்ற சந்தேகத்தை கிளப்புவதாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+