முன்னாள் அதிபரை கொல்ல சதி.. ‘பகீர்’ திட்டம் தீட்டியவர் கைது - FBI மூலம் சிக்கிய நபர் சொன்ன காரணம்!
வாஷிங்டன் (அமெரிக்கா) : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதித் திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈராக் மீது போர் தொடுத்ததற்காக, அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்வதற்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவது குறித்தும் அந்த நபர் விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிபரை கொல்ல சதி
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக 2000 முதல் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஜார்ஜ் புஷ். இந்நிலையில், ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ஈராக்கை சேர்ந்த ஷிகாப் அகமது ஷிகாப் (52) என்பவர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில், குடிபெயர்வோர் செய்யும் குற்றம், அமெரிக்க தலைவரை கொல்ல முயற்சி ஆகிய புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

விசிட்டிங் விசா
கைது செய்யப்பட்டுள்ள ஷிகாப் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசிட்டிங் விசாவில் அமெரிக்கா வந்துள்ளார். அவரது விசா காலம் காலாவதியானதை தொடர்ந்து 2021ம் ஆண்டு அடைக்கலம் கோரினார். கொலம்பஸ் பகுதியில் வசித்த ஷிகாப், FBI அமைப்புக்கு ரகசிய தகவல் அளிக்கும் நபரை தொடர்பு கொண்டு, ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்யும் சதி திட்டம் குறித்து விளக்கி உள்ளார்.

உயிரிழந்தவரின் உறவினர்
ஈராக் மீது போர் தொடுத்ததற்கும், அதனால் பலர் இறந்ததற்கும், மற்றும் அவர்கள் அகதிகளாக வெளியேறியதற்கும் காரணமாக இருந்ததால் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தான், அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபூபக்கர் அல் பாக்தாதியின் உறவினர் எனவும் கூறியதுடன், சதி திட்டத்தை நிறைவேற்ற மெக்சிகோ எல்லை வழியாக மேலும் 4 ஈராக்கியர்களை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆயுதங்கள்
அதில் இரண்டு பேர், ஈராக் உளவுப்பிரிவில் பணியாற்றியவர்கள். மற்றவர்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளார். டல்லாஸ், டெக்சாஸ் பகுதிகளில் ஜார்ஜ் புஷ் தொடர்புடைய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் கொலை செய்வதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் சீரூடைகள் வாங்குவது குறித்தும் விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

20 ஆண்டுகள் சிறை
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிரான சதியில் ஷிகாப் குடியேற்றக் குற்றச்சாட்டில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலைவரை கொல்ல திட்டம் தீட்டியது நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்று அமெரிக்க வழக்கறிஞர் தெரிவிரித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications