நியூயார்க் துப்பாக்கிச் சூடு!மன்ஹட்டனில் காவல் துறை அதிகாரி உள்பட 6 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் மன்ஹட்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் துறை அதிகாரி உள்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டால் சிலர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
நியூயார்க்கில் மன்ஹட்டனில் திங்கள்கிழமை மாலை (அமெரிக்க நேரப்படி) பார்க் அவென்யூவில் ஒரு தனியார் அலுவலகத்தின் அருகே யாரோ ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அங்கிருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என புரியும் முன்னரே அந்த நபர் சுட்டுக் கொண்டே இருந்தார். அப்போது அங்கிருந்த போலீஸார் அவரை பிடிக்க முயன்றனர்.

இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து போலீஸார், அந்த மர்மநபரை பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவரும் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த நபரின் உடலை சோதனை செய்த போது அதில் இருந்த ஆவணங்களை வைத்து அவர் 27 வயது ஷானே டி தமுரா என்பது தெரியவந்தது. அவர் எதற்காக சுட்டார் என தெரியவில்லை. ஆனால் அவர் மட்டும்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
எனினும் வேறு யாரேனும் பின்னணியில் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவருடைய நோக்கம் என்ன, இவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications