அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்!
வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சர்வதேச அளவில், பல்வேறு தரப்பினரின் வேலையை காலி செய்து வருகிறது. அந்த வகையில், மெட்டா நிறுவனம் மீண்டும் ஒரு பணி நீக்கத்திற்கு ரெடியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் பணி நீக்கங்களுக்கு பெரிய காரணம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கை காட்டப்படுகிறது.

ஊழியர்கள் பணி நீக்கம்
அந்த வகையில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், தனது விற்பனை, ஆள்சேர்ப்பு மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் ஹார்டுவேர் பிரிவு உட்பட பல குழுக்களில் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பல நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது. இது நிறுவனத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ரியாலிட்டி லேப்ஸ் ஹார்டுவேர் என்பது, VR ஹெட்செட்களை தயாரிக்கும் பிரிவு.
தற்காலிக வாய்ப்புகள்
இந்த பணிநீக்கங்கள் அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் உள்ள ஊழியர்களைப் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட சில பணியாளர்களுக்கு, நிறுவனத்திலேயே தொடர்வதற்கான மாற்றுப் பதவிகள் அல்லது வேறு இடத்திற்கு மாறிப் பணிபுரியும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
பணிநீக்கங்களுக்குத் தயாராக, மெட்டாவின் ரியாலிட்டி லேப்ஸ் பிரிவின் சில உறுப்பினர்கள், புதன்கிழமை அன்று வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
திடீரென வந்த மெயில்
“மெட்டாவில் உள்ள குழுக்கள், தங்கள் இலக்குகளை அடைய சிறந்த நிலையில் இருப்பதை உறுதிசெய்வதற்காக, வழக்கமாக மறுசீரமைப்புகளை அல்லது மாற்றங்களைச் செயல்படுத்துகின்றன” என மெட்டா செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். “வாய்ப்புள்ள இடங்களில், பணியிடங்கள் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு மாற்று வாய்ப்புகளைக் கண்டறிந்து வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.
எவ்வளவு பேர் பணி நீக்கம்?
இந்த பணிநீக்கங்கள் மொத்தமாக 1,000க்கும் குறைவான ஊழியர்களைப் பாதிக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், மெட்டா உலகளவில் சுமார் 79,000 ஊழியர்களைக் கொண்டிருந்தது. மெட்டா, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தொழில்நுட்பத் தொழில்துறையின் மிக ஆக்ரோஷமான முதலீட்டாளர்களில் ஒன்றாகும்.
தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், 2028க்குள் அமெரிக்க உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக மெட்டா $600 பில்லியன் செலவு செய்யும் என்று குறிப்பிட்டார். அப்படியெனில், மெட்டா ஏஐ-ல் முரட்டுத்தனமாக முதலீடு செய்கிறது என்று அர்த்தம்.
எங்கு சொதப்பியது மெட்டா?
இந்த ஆண்டு மெட்டா ஏற்கனவே தனது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. AI கண்ணாடிகள் மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி(VR) ஹெட்செட்கள் போன்ற எதிர்கால ஹார்டிஸ்குகளை உருவாக்கும் உள் பிரிவான ரியாலிட்டி லேப்ஸ், ஜனவரியில் 1,000க்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்தது. மெட்டாவர்ஸ் என அறியப்படும் சில மெய்நிகர் உலக தயாரிப்புகளிலிருந்து விலகி, செயற்கை நுண்ணறிவு அணியக்கூடிய சாதனங்களில் நிறுவனம் அதிக பணத்தை முதலீடு செய்ததே இதற்குக் காரணம்.












Click it and Unblock the Notifications