"எல்லா உலக தீவிரவாதத்திற்கு பின்னால் இருப்பது ஒரே நாடுதான்!" ஐநாவில் பாகிஸ்தானை அம்பலப்படுத்திய ஜெய்சங்கர்
வாஷிங்டன்: நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச் சபையின் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானைக் கடுமையாகச் சாடிப் பேசினார். சர்வதேச அளவில் நடந்த பெரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஒரே ஒரு நாடுதான் பின்னணியில் இருப்பதாக அவர் விமர்சித்தார். மேலும், பாகிஸ்தானுக்குப் போகும் நிதியைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐநா பொதுச் சபையின் 80வது கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாகிஸ்தானைக் கடுமையாகச் சாடிப் பேசினார். சர்வதேச அளவில் நடந்த பெரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஒரே ஒரு நாடுதான் பின்னணியில் இருப்பதாக அவர் விமர்சித்தார். கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ஜெய்சங்கர்
நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பேசிய அவர், "ஒரு நாடு வெளிப்படையாகவே பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவிக்கிறது. அங்கு பயங்கரவாத மையங்கள் வெளிப்படையாகச் செயல்படுகிறது, பயங்கரவாதிகள் பகிரங்கமாகப் போற்றப்படுகிறார்கள். இதுபோன்ற செயல்கள் நாம் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்" என்றார்.
ஒரே நாடு தான் காரணம்
உலகப் பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பல ஆண்டுகளாகவே உலகெங்கும் நடக்கும் தீவிரவாதத் தாக்குதலுக்கு அந்நாடுதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார். அவர் மேலும், "இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தச் சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலகப் பயங்கரவாதத்தின் மையமாக இருக்கும் ஒரு அண்டை நாடு எங்களுக்கு உள்ளது.
பல ஆண்டுகளாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டிலிருந்தே தோன்றுகின்றன. ஐ.நா.வின் பயங்கரவாதிகள் பட்டியலில் அந்நாட்டவர்கள் பலர் உள்ளனர்" என்று பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் கடுமையாகச் சாடினார்.
ஆபரேஷன் சிந்தூர்
'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிக் குறிப்பிட்ட அவர், "இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனது மக்களைப் பாதுகாக்கும் உரிமையைப் பயன்படுத்திக் கொண்டது.. மேலும், இந்த நடவடிக்கை மூலம் குற்றவாளிகளையும் நீதியின் முன் நிறுத்தியது" என்றார். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதைக் கண்டித்த ஜெய்சங்கர், அந்நாட்டு இதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர், "முக்கிய பயங்கரவாதிகள் மீது தடைகள் விதிக்கப்படும் நிலையில், பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதைத் தடுக்க வேண்டும். பயங்கரவாதிகளை அழிக்க அந்த நாடு மீது தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளை மன்னிப்பவர்கள், அது அவர்களையே திரும்பித் தாக்கும் என்பதைச் சீக்கிரமே உணர்வார்கள்" என்று கூறினார்.
கண்டிப்பு
ஐ.நா.வில் இந்தியாவின் ராஜதந்திரப் பிரதிநிதியான பெட்டல் கஹ்லோட் நேற்று தான் பாகிஸ்தானைக் கண்டித்து இருந்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பயங்கரவாதத்தைப் போற்றுவதாக அவர் நேரடியாகவே சாடியிருந்தார். அவர் அதுபோல சொல்லி சில மணி நேரத்தில் அமைச்சர் ஜெய்சங்கரும் பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெட்டல் கஹ்லோட் மேலும் பேசுகையில், "இந்தியா பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதாகக் கூறியது முழுக்க முழுக்க பொய்.. சண்டையை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம்தான் எங்களிடம் கெஞ்சியது. அழிக்கப்பட்ட ஓடுபாதைகளும், எரிந்த விமான நிறுத்தங்களும் வெற்றி போலத் தோன்றினால், பிரதமர் கூறியது போல, பாகிஸ்தான் அதை அனுபவிக்கலாம்" என்றும் கஹ்லோட் மேலும் கூறினார்.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications