அமெரிக்காவில்.. ஜனநாயக கட்சி நான்சி பெலோசி, குடியரசு கட்சி மிட்ச்யோ மெக்கானெல் வீடுகள் அவமதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் செனட் தலைவர் மிட்ச்யோ மெக்கானெல் மற்றும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகிரின் வீடுகளை மர்மநபர்கள் அவமதித்து உள்ளனர்.
நான்சி பெலோசி வீட்டின் முன்பு பன்றியின் தலையையும், போலி ரத்தத்தையும் போட்டு சென்றனர். மிட்ச் மெக்கானெல் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலில் எங்கே எனது பணம்? மிட்ச் ஏழைகளைக் கொன்றுவிடுகிறார் என்ற வாசகங்களும் கிறுக்கி வைத்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அமெரிக்கா கொரோனா பாதிப்பில் உலகின் முதல் நாடாக தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதனால் அந்த நாட்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் வேலை இழந்தனர். கொரோனா நிவாரண நிதிக்காக மக்கள் ஏங்கி தவித்து வந்தனர்.மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் 900 பில்லியன் டாலர் நிவாரண நிதி வழங்கபப்டும் என அறிவிக்கப்பட்டது.
ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் சபை தனி நபருக்கு கொரோனா நிதியாக 600 டாலரிலிருந்து 2,000 டாலர்களாக அதிகரிக்க ஒப்புதல் அளித்தது. ஆனால் குடியரசுக் கட்சி தலைமையிலான செனட் இந்த அதிகரிப்புக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் குடியரசுக் கட்சியின் செனட் தலைவர் மிட்ச் மெக்கானெல் மற்றும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரின் வீடுகளை மர்மநபர்கள் அசிங்கப்படுத்தியுள்ளனர்.
நான்சி பெலோசியின் வீட்டின் முன்பு ஒரு பன்றியின் தலையையும், போலி ரத்தத்தையும் புத்தாண்டு தினத்தில் மர்மநபர்கள் போட்டு சென்றதாகவும், மிட்ச் மெக்கானெல் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலில் எங்கே எனது பணம்? மிட்ச் ஏழைகளைக் கொன்றுவிடுகிறார் என்ற வாசகங்களும் கிறுக்கி வைக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை பிரிவை போலீசார் அமைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications